திருவாரூர், மே 12- நீட் மற்றும் கியூட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மத்திய பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு முறையை நிர்மூலமாக்கி வரும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டி த்தும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக்குழுவின் சார்பில் மே 12 வியாழனன்று திரு வாரூர் பழைய பேருந்து நிலை யத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருவாரூர் மாவட்டச் செயலாளர் தமிழ்மணி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, மாநில துணைப்பொதுச் செயலாளர் சின்னை.பாண்டியன், நாகை மாவட்டச் செயலாளர் பி. சுபாஷ் சந்திர போஷ், மாநிலக்குழு உறுப்பி னர் நிலவழகன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சுர்ஜித் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலைச்செல்வி, சிவகுரு ஆகியோர் பேசினர். தஞ்சை, திருவாரூர், நாகை,மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாதர் சங்கம், சிஐடியு, மாணவர் சங்கம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி
புதுச்சேரி மாநிலம், காலாப் பட்டில் உள்ள புதுவை மத்திய பல்கலைக்கழகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதுச்சேரி பிரதேச செயலாளர் ஜி. ராமசாமி தலைமை தாங்கினார். அகில இந்திய தலித் உரிமை இயக்கத்தின் தேசியத் தலைவர் அ.ராமமூர்த்தி, புதுச்சேரி யூனியன் பிரதேச தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலத் தலைவர் பி.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலை வர் ஜி.ஆனந்தன், பொதுப் பள்ளிக் கான மாநில மேடை பொதுச்செய லாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சிபிஎம் பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம், பிரதேச செயற்குழு உறுப்பினர் வி. பெருமாள், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் கே. வாசுதேவன்,விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஏ.சங்கரன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சரவணன், இந்திய மாணவர் சங்க புதுச்சேரி பிரதேச செயலாளர் சி.பிர வீன், அனைத்திந்திய மாணவர் பெரு மன்றத்தின் எஸ்.எழிலன், ஜி.சீனுவாசன், கே. ராதா கிருஷ்ணன், வீர. அரிகிருஷ்ணன், டி. தமிழ்ச்செல்வன், இ. சத்யா, உமா அமர்நாத், இ.கந்தன், வீ. நாக ராஜன், ஏ.பாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு வர்க்க, வெகுஜன, தலித் அமைப்புகளின் தலைவர்கள் பேசினர். ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். முன்னணியின் பொருளாளர் ஆர். ரமேஷ் நன்றி கூறினார்.