tamilnadu

img

இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி விபத்து ஏற்படுவதற்கு முன்பாக அகற்றக் கோரிக்கை

இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி விபத்து ஏற்படுவதற்கு முன்பாக அகற்றக் கோரிக்கை

நாமக்கல், ஜூன் 4- பள்ளிபாளையம் அருகே 45 வருடங் களுக்கு முன்பு கட்டப்பட்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளதால், விபத்து  ஏற்படுவதற்கு முன்பாக விரைந்து அகற்ற வேண்டும், என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யத்தை அடுத்த ஆவத்திபாளையம், காமராஜர் நகர் பகுதியில் 800க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். 45 வருடங்களுக்கு முன்பு அப்பகுதி யில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர்  தேவைக்காக, ஒரு லட்சம் லிட்டர் கொள் ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. தற்போது அந்த  தொட்டி சிதிலமடைந்து, சிமென்ட் காரை உதிர்ந்துள்ளது. மேலும், அதன்  துாண்களில் விரிசல் ஏற்பட்டு, கான் கிரீட் கம்பிகள் துருப்பிடித்து உடைந்து வெளியே தெரியும் அளவிற்கு பலவீன மாக உள்ளது. இக்குடிநீர் தொட்டியின் அருகே விசைத்தறி கூடங்களும், குடியி ருப்புகளும் அதிகமாக உள்ளன. மேலும், பள்ளி குழந்தைகள் காலை, மாலை வேளையில் இந்த குடிநீர் தொட் டியினை தாண்டித்தான் பள்ளிக்கு அச் சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை யும் உள்ளது. இதுதொடர்பாக கடந்த  ஆறு மாதங்களாக பல்வேறு அதிகாரி களை சந்தித்து பொதுமக்கள் புகார ளித்தும் எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கவில்லை. எனவே, இடிந்து  விழும் நிலையிலுள்ள குடிநீர் தொட் டியை இடித்து அகற்றிவிட்டு, புதிய  மேல்நிலை தொட்டியை கட்டித்தர வேண்டும், அன அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.