மலைவாழ் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை
உடுமலை, ஜூன் 1 – தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்துள்ள நிலையில், தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க, உடு மலைப் பகுதியிலுள்ள மலைவாழ் மக் கள் குடியிருப்புப் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண் டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவடாப்பு, குழிப்பட்டி, குருமலை, கருமுட்டி, பூச்சிகொட்டாம்பாறை, திரு மூர்த்திமலை, ஈசல்திட்டு, தளிச்சி, கோடந்தூர், கொட்டையாறு, பொருப் பாறு, ஆட்டுமலை, வசம்குழம், புளியம் பட்டி, மயிலாடும் பாறை, கரட்டுப்பதி, சேலையூத், காட்டுபட்டி என மொத்தம் 18 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உடுமலைப் பகுதியில் அமைந்துள் ளன. இவற்றில் பெரும்பாலான குடி யிருப்புகள் அடர்ந்த வனப்பகுதியிலும், சில அடிவாரத்திலும் அமைந்துள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு இடையே பல கிலோமீட்டர் தூரம் இடைவெளி உள் ளது. குறிப்பாக, மாவடாப்பு, குழிப்பட்டி, குருமலை, பூச்சிக்கொட்டாம்பாறை, மற்றும் மேல்குருமலை ஆகிய குடியி ருப்புகள் ஒரே மலைப்பகுதியில் அமைந்துள்ளன. இங்கு ஆயிரத்திற் கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரு கின்றனர். இந்த மக்கள் கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக உடு மலை நகருக்கு வர வேண்டுமானால், கோவை மாவட்டம் அட்டகட்டி வழியாக சுமார் 60 கிலோமீட்டர் தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது. மேலும், திருமூர்த்தி மலை வழியாக உடுமலை செல்ல அடர்ந்த வனப்பகுதியைக் கடந்து வர வேண்டும். அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழையால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள் ளதாக மலைவாழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, அரசு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி, அத்தியாவசிய மருந்துகளை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.