tamilnadu

img

கொரோனாவுக்கு பலியான மருத்துவர் மனைவிக்கு அரசு வேலை வழங்க கோரிக்கை

சென்னை, ஆக.14- கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு கருணை அடிப்படை யில் அரசு வேலைக்கான உத்தரவு  சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்  வழங்குவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதுகுறித்து அரசு மருத்துவர்க ளுக்கான சட்டப்போராட்டக் குழுத் தலைவர் மரு.எஸ்.பெருமாள் பிள்ளை விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:- கொரோனா தொற்றால் உயிரிழந்த  அரசு மருத்துவர்களின் குடும்பத் தினருக்கு, மாநில அரசு தன் பங்காக  பத்து பைசா கூட கொடுக்க முன்வர வில்லை. அது மட்டுமல்ல. அந்த 9 பேரில் ஒரே ஒரு குடும்பம் மட்டுமே கருணை அடிப்படையில் அரசு வேலை கேட்கிறது. கோவிட் முதல் அலையின் போது, பெரும்பாலான தனியார் மருத்து வமனைகள் மூடப்பட்டன. அப்போது அரசு மருத்துவமனைகளும், அரசு மருத்துவர்களுமே மக்களுக்கு வரப் பிரசாதமாக இருந்தனர். அப்படிப்பட்ட கொடூரமான முதல் அலையின் போது உயிரிழந்தவர் தான் காது, மூக்கு, தொண்டை நிபுணர் விவேகானந்தன். கொரோனாவுக்கு எதிராக போரிடும்  மருத்துவர்களுக்கு ராணுவ வீரர்களுக்கு இணையாக மரியாதை தரப்படும் என அறிவித்தார் நமது  முதல்வர். ஆனால், அந்த குடும்பத் திற்கு அரசு வேலை கூட தரவில்லையே  என்று மருத்துவர் விவேகானந்தனின் குடும்பம் கண்ணீர் விடுகிறது. விவேகானந்தனின் மனைவி திவ்யா, தனது கல்வித் தகுதிக்கேற்ற வேலை கேட்டு,சுகாதாரத் துறை அமைச்சரை தனது குழந்தைகளுடன் 15 முறைக்கு மேலாக சந்தித்து மன்றா டியுள்ளார். சுகாதாரத் துறை செயலாள ரையும் சந்தித்துள்ளார். இவருக்காக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனாலும், விவேகானந்தன் மனைவி திவ்யாவின் கண்ணீர் வேண்டு கோள் முதல்வரின் பார்வைக்கு  செல்ல வில்லை ஏனோ தெரியவில்லை. இருப்பினும்  முதல்வர் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. எனவே  ஆகஸ்டு 15 ஆம் தேதி சுதந்திர தினத் தன்று, அரசு வேலைக்கான உத்தரவை  முதல்வர் வழங்க வேண்டுகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.