ஆன்லைன் டோக்கன் முறையை கைவிட கோரிக்கை
மாதாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி
அரியலூர், மே 30- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த ஏரவாங்குடி அருகே, மாதாபுரம் புனித லூர்து அன்னை ஜல்லிக்கட்டு போட்டியில் 600-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர். பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும், மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும் 1000 முதல் 20,000 வரை ரொக்கம், ட்ரெஸ்ஸிங் டேபிள், பீரோ, கட்டில் சைக்கிள், சில்வர் குவளை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஆன்லைன் டோக்கன் முறையை கைவிட வேண்டும் என மாட்டின் உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். போட்டியை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷிஜா, வட்டாட்சியர் சம்பத், டிஎஸ்பி ரவிசக்கரவர்த்தி உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.