திருச்சிராப்பள்ளி, ஜூலை 19 - மக்களைத் தேடி மருத்துவ ஊழி யர்கள் தொழிற்சங்க அமைப்பு மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டல் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு சிஐடியு மாநிலச் செய லாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் சுகுமாறன் சிறப்புரை யாற்றினார். மாநிலச் செயலாளர்கள் மாலதிசிட்டிபாபு, கோபிகுமார், ஆஷா திட்ட ஊழியர்கள் மாநிலச் செய லாளர் சீதாலெட்சுமி, கோவை லெட்சுமி, பொள்ளாச்சி மலர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். பயணப்படி, உணவுப்படி வழங்க வேண்டும். தன்னார்வலர் என்பதை ஊழியர்கள் என மாற்ற வேண்டும். கோரிக்கை மாநாட்டை வரும் செப்டம்பர் மாதம் சென்னை யில் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. தலைவராக கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலாளராக லெட்சுமி, பொருளாளராக மலர் உள்பட 26 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் கலந்து கொண்டனர்.