tamilnadu

மத்திய அரசின் விலையில் பருத்தி கொள்முதல் செய்யக் கோரிக்கை

குடவாசல், ஜூன் 12- திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் வி.எஸ்.கலியபெருமாள் விடுத்துள்ள அறிக்கையில், விவசாயிகளிடமிருந்து அரசு வேளாண் துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத் தில் பருத்தி கொள்முதல் செய்யும் போது மத்திய அரசு நிர்ணயம் செய்த விலை குறையாமல் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே பருத்தி சாகுபடி ஏக்க ருக்கு ரூ.25,000 முதல் 30,000 வரை செலவு செய்து இந்த ஆண்டும் பருத்தி சாகுபடி செய்துள் ளனர். பருத்தி செடியினை பாதுகாக்க பூச்சி மருந்து அடிக்கும் செலவு ரூ 2000, தொழிலாளர்க ளை கொண்டு பருத்தி எடுக்க கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் கூலி செலவு, தாட் செலவு ரூ.40 மேலும் விற்பனைக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து செலவு என ஆக கூடுதல் செலவு ஆகிறது. அனைத் தையும் கடந்து அரசு வேளாண் துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்றால் மத்திய அரசு நிர்ணயம் செய்த விலையை எடுப்பதில்லை. மத்திய அரசு நீண்ட இலை ரகத்திற்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ5,515 குட்டை இலை ரகத்திற்கு குவிண்டால் ரூ 5,875 பரிந்துரை விலை அறிவித்துள்ளது. ஆனால் நிர்ணயித்த விலை யில் கொள்முதல் செய்யாமல் ஒரு குவிண்டா லுக்கு ரூ. 4600 என்றும் அளவில் அரசு வேளாண் துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் கேட்கப்படுகிறது.

தனியார் வியாபாரிகள் ஒரு குவிண்டால் ரூ. 3200 என ஏலம் நிர்ணயம் செய்கி றார்கள். பருத்தியை வியாபாரிகள் அரசு வேளாண் துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரி களும் சிண்டிகேட் அமைத்து குறைந்த விலைக்கு எடுக்கிறார்கள். இது விவசாயிகளுக்கு மிகுந்த பாதிப்பையும் வேதனையை உண்டாக்குகிறது. மேலும் திருவாரூர் மாவட்டத்தில் ஏழு இடங்களில் கொள்முதல் நிலையங்கள் செயல்பட வேண்டும். ஆனால் திருவாரூர், வலங்கைமான், குடவாசல் ஆகிய வட்டாரத்தில் மட்டும் அரசு வேளாண் துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொள்முதல்  செய்யப்படுகிறது. அனைத்து இடங்களிலும் விவசாயகளிலி ருந்து மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள பருத்தி கொள்முதல் விலையை முறையாக விவசாயிக ளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும். கொரோனா பாதிப்பு காலத்திலும் விவசாயிகள் தங்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் பருத்தி பயிரை உற்பத்தி செய்துள்ளனர். அதனை விலையை குறைத்து கொள்முதல் செய்தால் முதலுக்கே மோசமாகி விடும். ஆகவே மாவட்ட ஆட்சியர் தனி கவனம் எடுத்து மத்திய, மாநில அரசு பருத்திக்கு நிர்ணயித்த விலையில் எடுக்க உத்தரவிட வேண்டும். வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து குறைந்த விலைக்கு ஏலம் எடுக்கும் முறையை கண்காணித்து முறைகேட்டில் ஈடு படும் வியாபாரிகள்- அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளை காக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.