கல்வி, சுகாதாரம் ஆகிய பணிகளுக்கு 30 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்
நெல்லையில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
திருநெல்வேலி, ஏப்.12- பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசின் வரி வருவாயிலிருந்து 10 சதவீத நிதி மட்டுமே ஒதுக்கீடு செய் யப்படுகிறது. இது கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பணிகளுக்கு போதுமான தாக இருப்பதில்லை. கேரளத்தில் மாநில அரசின் வரி வருவாயில் இருந்து 34 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படு கிறது. எனவே, தமிழகத்தில் குறைந்த பட்சம் 30 சதவீதமாவது நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசியல் சட்ட திருத்தம் 74 இன் படி மாவட்ட அள வில் திட்டக் குழு அமைத்து மாவட்டத் திற்கான வளர்ச்சி திட்டத்தை உரு வாக்க வேண்டும். ஆனால் அந்த குழு தமிழகத்தில் இதுவரை அமைக்கப்பட வில்லை. அதனை உடனடியாக தமி ழக அரசு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட அளவில் திட்டக் குழு ஒன்றை உருவாக்கி மாவட்ட ஊராட்சி தலைவரையே அந்த குழு விற்கு தலைவராக நியமனம் செய்ய வேண்டும். நகர்ப்புறங்களில் வார்டு சபை கூட்டங்கள் நடத்த சிறப்பான முறையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வார்டு சபை கூட் டங்கள் ஜனநாயக முறைப்படி சுய மாக நடைபெற தமிழக அரசு உத விட வேண்டும். உள்ளாட்சி அமைப்பு களை மாவட்ட அரசாக கருதி ஜன நாயகப்பூர்வமாக செயல்பட தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். போராட்டங்கள் நடத்தக்கூடிய அரசு ஊழியர்கள் சங்கங்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண் டும். நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதி களுக்கு மாநில அரசு பயிற்சி அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார் பேட்டியின் போது மாநில செயற் குழு உறுப்பினர் என். குணசேகரன் மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ் கரன், மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம், மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், ஊத்துக்குளி பேரூராட்சி கவுன்சிலர் சரஸ்வதி மற்றும் பலர் உடனிருந்தனர்.
திருநெல்வேலி, ஏப்.12- தமிழகத்தில் மாவட்ட அளவில் உட னடியாக திட்டக் குழுவை அமைக்க வேண்டும் என பாளையங்கோட்டை யில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பயிலரங்கில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிலரங்கம் பாளையங்கோட்டை தியாகராஜநக ரில் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழ மைகளில் நடைபெற்றது. இப் பயி லரங்கிற்கு மதுரை மாநகராட்சி துணை மேயர் டி.நாகராஜன், சென்னை மாநக ராட்சி மாமன்ற உறுப்பினர் ஜெய ராமன், பழனி நகராட்சி துணைத்தலை வர் கந்தசாமி, ஊத்துக்குளி பேரூ ராட்சி வார்டு உறுப்பினர் சரஸ்வதி ஆகி யோர் தலைமை வகித்தனர். சிபிஎம் நெல்லை மாவட்டச் செயலா ளர் ஸ்ரீராம் வரவேற்று பேசினார். காந்தி கிராம பல்கலைக் கழக அரசியல் அறி வியல் துறையின் முன்னாள் தலைவ ரும், பேராசிரியருமான க.பழனித்துரை பயிலரங்கை தொடங்கி வைத்துப் பேசி னார். பயிலரங்கின் நோக்கத்தை விளக்கி கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் ஆகி யோர் பேசினர். மாநிலக்குழு உறுப்பி னர் கே.ஜி.பாஸ்கரன் வாழ்த்திப் பேசி னார். அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் ஜி.ராமகிருஷ்ணன் நிறைவுரை யாற்றினார். திருநெல்வேலி மாநக ராட்சி மாமன்ற உறுப்பினர் முத்து சுப்பிர மணியன் நன்றி கூறினார்.
பயிலரங்கில், மாநில வரி வருவா யில் 30 சதவீதத்துக்கு குறையாமல், தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்பு கள் மூலம் செலவிடப்பட வேண்டும், உள்ளாட்சி பிரதிநிதிகளைக் கொண்டு உடனடியாக மாவட்ட திட்டக்குழு அமைக்கப்பட வேண்டும், உள்ளாட்சி பிரதிநிதிகள் மன்றங்களில் திட்டமி டப்படும் செலவினங்களுக்கு திட்டக் குழு இருந்தால் அதன்மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசிடம் கூடுதலாக நிதி பெறமுடியும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு ஓர் ஆண்டு முடிந்தும் திட்டக்குழு அமைக் கப்படவில்லை. எனவே உடனடியாக திட்டக்குழுவை அமைத்திட வேண்டும்.
உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஊதியம்
கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்க ளில் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஊதியம் வழங்கப்படு கிறது. அதனடிப்படையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும். நகர்ப் புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு ஓர் ஆண்டு முடிந்தும் பயிற்சி வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக பயிற்சி வழங்கிட நடவ டிக்கை எடுக்க வேண்டும்,நகர்ப்புற, கிராமப்புற உள்ளாட்சி அமைப்பு களில் மீண்டும் வார்டுகள் மறு சீர மைக்கப்படும் என்று நகர்ப்புற உள் ளாட்சித்துறை அமைச்சர் அறிவித்தி ருக்கிறார். கடந்த அரசைப்போல் இல் லாமல் இந்த முறை ஜனநாயக தன்மை யுடன் வெளிப்படையாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் மூலம் இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். அரசு விழாக் கள், கல்வெட்டுகள், நாளிதழ் விளம்ப ரங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநகராட்சி துணை மேயர், நக ராட்சி, பேரூராட்சி துணைத்தலைவர் கள் பெயர் இடம்பெற வேண்டும்.
நகராட்சி கூட்டங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் நகராட்சி துணைத் தலைவர் களுக்கு தலைவர் இருக்கைக்கு அரு கில் மற்ற நகராட்சிகளை போல இருக்கை அமைக்கப்பட வேண்டும். பாகுபாடு இருக்கக் கூடாது,மாநில அள வில் நகர்மயமாதல் நிபுணர்கள், நகர்ப் புற ஆய்வு துறைகளில் ஆழ்ந்த அனு பவம் கொண்டவர்களை உள்ளடக்கிய ஒரு நகர்ப்புற உயர்மட்டக் குழு அமைத்து அதன் ஆலோசனைகளை பெற்று கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பது நல்ல நடைமுறையாக இருக் கும். தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், சாதாரண மக்களுக்கு ஏற்றவாறு கட்டட வடிவமைப்பு மேற் கொள்கிற நிபுணர்கள், நகர்ப்புற செயல்பாட்டாளர்கள், பொருளியல் சமூகவியல் அறிஞர்கள் உள்ளிட்ட வர்களை கொண்டதாக இந்த உயர் மட்டக் குழு இருக்க வேண்டும்.
தமிழில் பட்ஜெட் நகல்
பட்ஜெட் நகல் நகராட்சிகளில் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு என் பெயர் கொண்ட மாநிலத்தில் ஆங்கிலத்தில் வழங்கு வது பொருத்தமல்ல. எனவே தமிழில் வழங்குவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். நகராட்சி, பேரூராட்சிகளில் மாத வரவு/ செலவுகள் முறையாக வைக்கப்பட வேண்டும். அரசாணை கள் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங் கப்பட வேண்டும். வெளிப்படைத் தன் மையுடன் நிர்வாகம் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். வார்டு களுக்கு நிதி ஒதுக்கீடு என்பது பாரபட் சம் இல்லாமல் வழங்கப்பட வேண்டும். பல்வேறு நகராட்சிகளில் ஆணை யர்/பொறியாளர், பிறப்பு/இறப்பு பதி வாளர் பணியிடங்களில் கூடுதல் பொறுப்பாக பணியாற்றுகிறார்கள். இதனால் மக்கள் பணி பாதிக்கப்படு கிறது. எனவே நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலிப்பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண் டும். 2007ஆம் ஆண்டுக்கு பிறகு வறு மைக்கோடு பட்டியல் கணக்கெடுக்கப் படவில்லை. இதனால் தற்போது முதி யோர் உதவித் தொகை பெறுவதில் சிர மம் ஏற்படுகிறது. எனவே அரசு உட னடியாக புதிதாக வறுமைக்கோடு பட்டி யலை கணக்கெடுக்க வேண்டுகிறோம். நகராட்சி, பேரூராட்சிகளில் வார்டு சபா மூலம் குறைந்தது ரூ.2 லட்சத் தில் பணிகள் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட வேண்டும். மாநக ராட்சி, நகராட்சிகளில் வார்டுக்கு தலா ஒரு வாசக சாலைகள் அமைக்கப்பட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. (ந.நி)