சென்னை, மார்ச் 7 - ‘கவிஞர் தமிழ் ஒளியின் படைப்பு வெளி’நூலை வியாழனன்று (மார்ச் 7) சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமை ச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டார். தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. சங்க காலப் புலவர் கபிலர் நினைவாக திருக் கோவிலூரில் நிறுவப்பட்டுள்ள நினைவுத் தூணையும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டிடங்களையும் அமைச்சர் திறந்து வைத்தார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வாயிலாக உருவாக்கப்பட்ட பழந்தமிழ் இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் மற்றும் சிறார் இலக்கியங்களின் ஒலி நூல்களையும், 35 தமிழறிஞர்களின் கட்டுரைகள் அடங்கிய ‘கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புவெளி’ எனும் நூலை யும் அமைச்சர் வெளியிட்டார். தேவநேயப் பாவாணர் விருது ப. அருளிக்கும், வீரமாமுனிவர் விருது முனைவர் ச. சச்சிதானந்தத்திற்கும், நற்றமிழ்ப் பாவலர் விருதுகளை அரிமாப்பாமகன், கௌதமன் நீல்ராசு ஆகியோருக்கு வழங்கினார். மேலும், 21 பேருக்கு நற்றமிழ்ப் பாவலர் விருதையும் வழங்கினார்.
தமிழ் இடம்பெறும் இதனை தொடர்ந்து செய்தியாளர் களிடம் பேசிய அமைச்சர் மு.பெ.சாமி நாதன், “ஒன்றிய அரசு அலுவலகங் களில் உள்ள விண்ணப்பங்கள் ஆங்கி லம், இந்தியில் மட்டுமே உள்ளன. ஏற்கனவே இருந்தது போல் அதில் விண்ணப்பங்களில் தமிழும் இடம்பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இந்நிகழ்ச்சியில் அரசு செயலாளர் முனைவர் இல.சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். பன்னாட்டுக் கருத்தரங்கம் இதனைத்தொடர்ந்து கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுப் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. பேரா.வீ.அரசு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கவிஞர் தமிழ்ஒளி நூற்றா ண்டு விழா குழு தலைவர் சிகரம் ச. செந்தில்நாதன் தொடங்கி வைத்தார். விழாக்குழு செயலாளர் கவிஞர் இரா.தெ.முத்து வாழ்த்திப் பேசினார். ‘கவிஞர் தமிழ்ஒளி படைப்புவெளி’ எனும் தலைப்பில் அறிஞர்கள் பேசி னர். நிறைவு நிகழ்ச்சியில் கவிஞர் ஈரோடு தமிழன்பன், பேரா.பர்வீன் சுல்தானா, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் ஸ்டாலின் கோபி நாத், முனைவர் நா.சுலோசனா உள்ளிட்டோர் பேசினர்.