tamilnadu

img

ரீல்ஸ் மோகம்: தண்டவாளத்தில் இளைஞர்கள்

ரீல்ஸ் மோகம்: தண்டவாளத்தில் இளைஞர்கள்

நாமக்கல், ஜூன் 27- ஆபத்தான முறையில் ரயில்வே தண்டவாளத்தில் நின்று  கொண்டு ரீல்ஸ், புகைப்படம் எடுக்கும் இளைஞர்களை போலீ சார் எச்சரிக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள் ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிபாளையத்தில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களை இணைக் கும் வகையில் ரயில்வே இருப்புப்பாதை அமைந்துள்ளது. இந்நிலையில், பள்ளிபாளையத்தில் இருந்து திருச்செச் கோடு செல்லும் கீழ் காலனி என்ற பகுதி அருகே உள்ள  ரயில்வே தண்டவாளத்தின் நடுவே வெள்ளியன்று கல்லூரி விட்டு வந்த ஐந்துக்கும் மேற்பட்ட கல்லூரி இளைஞர்கள், ஆபத்தான முறையில் நின்று கொண்டு ரீல்ஸ், புகைப்படம் எடுத்துள்ளனர். அதில் ஒரு மாணவர் தண்டவாளத்தின் ஓரத் தில் அமர்ந்து போனில் மூழ்கினார். இதுகுறித்த வீடியோ தற் போது வெளியாகி உள்ள நிலையில், அடிக்கடி இந்த தண்ட வாளப் பகுதியில் எதிர்பாரதவிதமாக ரயில் மோதி பலர் உயிரி ழந்து வருகின்றனர். ஆபத்தான முறையில் இதுபோன்று ரீல்ஸ் எடுக்கும் இளைஞர்களுக்கு போலீசார் உரிய அறிவுரை களை வழங்க வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.