கோட்டயம், பிப். 8- பாம்பு கடித்து சிகிச்சை பெற்று வந்த வாவா சுரேஷ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். கோட்ட யம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாவா சுரேஷ், திங்களன்று (பிப்.7) காலை மருத்துவக் குழுவின் பரிசோதனைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். வாவா சுரேஷை அமைச்சர் வி.என்.வாசவன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இது தனக்கு இரண்டாவது பிறப்பு என வாவா சுரேஷ் தெரிவித்தார்.