பாறைகள், பனி மற்றும் பனிக்கட்டிகளா லான தரிசு பூமியான ஆண்டீஸ் மலைத் தொடரின் உயரமான எரிமலைகள் நிறைந்த பிரதேசத்தில் இலைக் காது சுண்டெலிகள் (leaf-eared mouse) வாழ்ந்துகொண்டிருப்பது விஞ்ஞானிகளுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. உறைபனிநிலைக்கு கூடுதலாக இங்கு வெப்ப நிலை எப்போதும் உயர்வதேயில்லை. இங்குள்ள காற்று அடர்த்தி குறைவானது. அதனால் சுவா சிப்பது கடினம். கடல் மட்டத்தில் இருந்து 20,000 அடி உயரமுள்ள இப்பகுதி உயிரினங்கள் வாழத் தகுதி யற்ற இடம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உலகின் உயரமான இடத்தில் வாழும் பாலூட்டி
ஆனால் 2013ல் மலையேற்றக் குழு ஒன்று சிலி அர்ஜெண்டினா எல்லையில் அமைந்திருக்கும் 22,000 அடி உயரமுள்ள வால்கான் யுலேலாக்கோ ( Volcán Llullaillaco) என்னும் எரிமலை சிக ரத்தை ஏறிக்கொண்டிருந்தபோது வழக்கத்திற்கு மாறான ஒன்றை கண்டனர். பனியில் ஓடிக் கொண்டிருந்த ஒரு சிறிய சுண்டெலிதான் அது! இந்த கண்டுபிடிப்பை உறுதி செய்ய விஞ்ஞானிகள் குழு ஒன்று இந்த சிகரத்தை 2020ல் ஏறி ஆராய்ந்த போது உயிருள்ள சுண்டெலி ஒன்றை பிடித்தனர்.
சுண்டெலியைத் தேடி
தாவரங்கள் முளைத்திருந்த பகுதிக்கும் மேல் 2,000 அடி உயரத்தில் வாழும் இந்த உயிரினம் உல கின் மிக உயரமான இடத்தில் வாழும் பாலூட்டி என்ற பெயர் பெற்றுள்ளது. “இது மிக வியப்பா னது. இங்குள்ள நிலப்பகுதி செவ்வாய்க் கோளில் இருப்பது போன்ற அமைப்பை பெற்ற இடம். வாழ்வதற்கு கடினமான பிரதேசம். அதிலும் குறிப்பாக இந்த எரிமலை சிகரங்கள் இருக்கும் பகுதி உயிரினங்கள் வாழ இயலாத இடம்” என்று நஃப்ராஸ்கா லிங்கன் (Nebraska– Lincoln) பல்கலைக்கழக பரிணாம உயிரியலாள ரும் 2020ல் இங்கு சென்ற ஆய்வுக்குழுவின் தலை வருமான ஜே ஸ்டோர்ஸ் (Jay Storz) கூறுகிறார். இதன் பிறகு ஆண்டீஸ் மலைத்தொடரில் 21 சிக ரங்களில் இந்த சுண்டெலியைத் தேடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
புதைபடிவங்களின் கண்டுபிடிப்பு
இது குறித்த ஆய்வுக்கட்டுரை கரண்ட் பயாலஜி (Current Biology) என்ற ஆய்விதழில் வெளி வந்துள்ளது. இப்பகுதியில் உள்ள வால்கான் செலின் (Volcán Salín) உள்ளிட்ட மூன்று எரி மலைகளில் ஆய்வுக்குழுவினர் 13 பதப்படுத்தப் பட்ட சுண்டெலிகளின் புதைபடிவங்களைக் கண்ட றிந்தனர். இதில் இருந்து இந்த உயிரினங்கள் இப்பகுதியை பல காலமாக வாழிடமாகக் கொண் டுள்ளன என்று தெரியவருகிறது.
வியப்பூட்டும் கண்டுபிடிப்பு
“இந்த கண்டுபிடிப்பு வியப்பூட்டுவது. இது கடினமான சூழலில் உயிரினங்கள் தங்களை தகவ மைத்துக் கொண்டு வாழும் திறன் பற்றிய முந்தைய கணிப்புகளுக்கு சவால் விடுகிறது” என்று அர் ஜெண்டைன் வறண்ட நில ஆய்வுமையத்தின் நடத்தை சூழலியலாளர் இமானுவெல் ஃபெபி யான் ரூப்பெட்டோ (Emmanuel Fabián Ruperto) கூறுகிறார்.
சில பல பத்தாண்டுகள்
இவற்றிற்கு உயரமான இந்த எரிமலைப்பகுதி களில் எவ்வாறு உணவு கிடைக்கின்றன?, இவை ஏன் இங்கு வந்து வாழத்தொடங்கின?, இவை எவ்வாறு இங்கு வந்தன? போன்ற பல கேள்வி களை இந்த கண்டுபிடிப்பு ஆய்வாளர்களிடையில் ஏற்படுத்தியுள்ளது. சைலின் மற்றும் கோப்பி யாப்போ (Copiapó) எரிமலைச் சிகரங்களில் இவை வந்து வாழத்தொடங்கி ஒரு சில பத்தாண்டுகளே ஆகிறது என்று கார்பன் தேதியிடல் தொழில்நுட்ப ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
பழங்குடியின மக்களும் சுண்டெலிகளும்
வால்கான் ப்யூலர் (Volcán Púlar) என்ற எரி மலை பகுதியில் இருந்து கிடைத்த மாதிரிகள் இவை அங்கு 350 ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே வாழ்கின்றன என்பதை எடுத்துக்காட்டியுள்ளது. இங்கு வாழ்ந்த இன்காஸ் (Incas) பழங்குடியினர் மத சடங்குகளுக்காக நர பலி, மிருக பலி கொடுக்க இப்பகுதிகளுக்கு வருவது வழக்கம். அவர்கள் மூலம் தெரிந்தோ தெரியாமலோ இந்த சுண்டெலி கள் இங்கு வந்திருக்கலாம் என்று தொல்லியல் நிபு ணர்கள் முன்பு கூறினர்.
ஆண்டீஸ் மலை எலிகளும் அட்டகாமா எலிகளும்
ஆனால் இன்காஸ் மக்கள் இந்த உயிரினங்கள் இங்கு குடியேறுவதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்பே இப்பகுதிகளுக்கு வந்து சென்றனர் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. எலிகளின் புதை படிவங்கள் உறைந்து காய்ந்த நிலையில் இருந்த தால் அவற்றில் உள்ள டி என் ஏ மரபணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டு அட்டகாமாவில் தாழ்வான மற்றும் நடுத்தர உயரங்களில் காணப்படும் இதே வகை சுண்டெலிகளின் மரபணுப்பொருட்களுடன் ஒப்பிட்டு ஆராயப்பட்டது.
ஒரே குடும்பமாக வாழும் எலிகள்
அதிக உயரத்தில் வாழும் இவ்வுயிரினங்கள் தனிச்சிறப்புடைய புதிய வகை உயிரினமா என்று ஆராயப்பட்டபோது அவ்வாறு இல்லையென்பது மரபணு தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. வறண்ட பாலைவனம் போல அமைந்திருக்கும் இந்த எரிமலைகளின் சுற்றுவட்டாரப்பகுதிகள், தரைமட்டம் மற்றும் பிற உயரங்களில் வாழும் இவை அனைத்தும் ஒரே குடும்பமாக சந்தோஷ மாக வாழும் ஒரே வகை உயிரினம் என்று கண்ட றியப்பட்டது.
விடை தெரியாத புதிர்கள்
நாசா செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பப் பயிற்சிகளை வழங்கும் கடினமான சூழலுள்ள இந்த நிலப்பகுதியை எலிகள் தாமாகவே தேர்ந்தெ டுத்து இங்கு வாழ்கின்றன. ஆனால் இவை இந்த இடத்தை ஏன் தேர்ந்தெடுத்தன என்பது இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது. எந்த உயிரினமும் பூமியில் எத்தகைய கடின மான சூழ்நிலையிலும் அதிலும் குறிப்பாக வேறெந்த வெப்ப இரத்த பாலூட்டி விலங்குகள் வாழாத தனிமைச்சூழலில் வாழலாம்என்பதை இரண்டே அவுன்ஸ் எடை உள்ள இந்த எலிகள் நிரூ பித்துக்காட்டியுள்ளன. இது பற்றி தீவிர ஆய்வு கள் மேற்கொள்ளப்படும் என்று ஆய்வுக்குழு வினர் கூறியுள்ளனர். இயற்கையின் அருளுடன் மனிதர்களின் குறுக்கீடுகள் இல்லாமல் சுதந்திர மாக வாழும் இவை இயற்கை படைத்த இன்னொரு புதிரான அற்புதமே!