tamilnadu

img

நகர்ப்புற பிரச்சனைகள்

l    வேகமான நகரமயமாக்கல் மற்றும் ஒருதலைப்பட்சமான வளர்ச்சியின் பின்னணியில், நகர்ப்புறங்களில் உள்ள முறைசாரா மற்றும் அமைப்பு சாரா தொழிலா
ளர்களின் நலன்களைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கைகள்.
l    குடிநீர், சுகாதாரம், கல்வி மற்றும் ஏனைய அத்தியாவசிய பொது சேவைகளை தனியார்மயமாக்குவதை நிறுத்துவது.
l    ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகள் மற்றும் குடிசைப்பகுதிகளை இடிப்பது ஆகியவற்றை நிறுத்த வேண்டும். அடிப்படை வசதிகளை அவ்விடத்திலேயே மேம்படுத்துவதை உறுதி செய்தல்.
l    பொது வீடமைப்பு வசதிகள், பொதுப் போக்குவரத்து மற்றும் பூங்காக்களை விரிவுபடுத்துதல்.
l    அனைத்து வகையான மாசுபடுதல் மற்றும் சுற்றுச் சூழல் சீரழிவைத் தடுக்க நடவடிக்கை எடுத்தல்.
l    தனியார் ரியல் எஸ்டேட் நலன்களை விட சாதாரண மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய நகர்ப்புற கொள்கையை நோக்கி பணியாற்றுவது.
l    74வது அரசியலமைப்பு திருத்தத்தை வலுப்படுத்துவதன் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்படுவதை உறுதி செய்தல்.
l    அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் முறையான வீட்டுவசதி, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான தேவைகளை பூர்த்தி செய்ய, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதுமான நிதி ஆதாரங்களைஅரசாங்கத்திடமிருந்து கைமாற்றுவதை உறுதி செய்தல்.