tamilnadu

ராமஜெயம் கொலை வழக்கு சிறப்பு புலனாய்வுக்குழுவின் 5 தனிப்படைகள் தீவிர விசாரணை

திருச்சி,மார்ச் 13- திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேருவின் தம்பி ராமஜெயம்  2012 ஆம் ஆண்டு மார்ச் 29ம் தேதி அதிகாலை நடைபயிற்சி மேற்கொள்ளும் போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர், கல்ல ணை சாலையில் உள்ள காவிரிக் கரையோரம் கை, கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப் பட்டது. இதுதொடர்பாக, ஸ்ரீரங்கம் காவல் நிலை யத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போதைய திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் தலை மையில், 12 தனிப்படைகள் அமைக்கப்பட் டன. பின்னர்  இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப் பட்டது.  கடந்த, 2017ம் ஆண்டு, ராமஜெயத்தின் மனைவி லதா தொடர்ந்த வழக்கின் காரணமாக, உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. தொடர்ந்து, 4 ஆண்டுகள் சிபிஐ விசாரி த்தும் வழக்கில் எந்த துப்பும் துலங்கவில்லை.  

இதனால், ராமஜெயத்தின் மற்றொரு சகோதரர் ராமச்சந்திரன், ‘இந்த வழக்கை, தமிழக காவல்துறை விசாரிக்க வேண்டும்’ என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி பாரதிதாசன், ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புல னாய்வு குழு அமைக்கவும், வழக்கு தொடர் பாக, 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். அதன்படி, தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார், அரியலூர்  மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மதன், சிபிஐ துணை காவல் கண்காணிப் பாளர் ரவி ஆகியோர் கொண்ட சிறப்பு புல னாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது, ஏற்கனவே பல்வேறு குழுவினர் விசாரித்து வைத்துள்ள ஆவ ணங்களின் மீதான மேல் விசாரணையை துவக்கியது. அடுத்த அதிரடியாக, திருச்சி யில் மார்ச் 13 அன்று முகாமிட்டுள்ள சிறப்பு புல னாய்வுக் குழு எஸ்.பி. ஜெயக்குமார், டிஎஸ்பி மதன் உள்ளிட்டோர், வழக்கு தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இவர்கள் தலைமையிலான, 5 தனிப்படை யினர், திருச்சியில் பல்வேறு குழுக்களாக பிரிந்து, தீவிர விசாரணை மேற்கொண்டுள் ளனர்.