tamilnadu

மதச்சார்பற்ற  ஜனதா தளம்  ரமலான் வாழ்த்து

மதுரை, மே 24- தமிழ்நாடு மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மாநிலப்பொதுச் செயலாளர் க.ஜான்மோசஸ் ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமது வாழ்த்துச் செய்தியில், “இந்திய சுதந்திரப் போரா ட்டம் தொடங்கி கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிரான போராட்டம் வரை அனைத்திலும் இஸ்லாமியர்களின் பங்கு மகத்தானது. இந்த ரமலான் மாதத்தி லும் கொரோனாவின் தாக்கம் குறைந்து அது நம்மை கடந்து போகும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை ரம லான் நாளில் சபதமேற்போம். எல்லோ ரும் இன்புற்று வாழ வளர எல்லா நலமும் வளமும் பலமும் பெற புனித ரமலான் நாளில் இஸ்லாமியர்களுக்கு இனிய ரம்ஜான் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

;