மதுரை:
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை ஆவணங்களை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் தமிழக அரசு தாக்கல் செய்தது.மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.அந்த மனுவில், தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தனது பதவியை தவறாக பயன்படுத்தி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்.
இதுகுறித்து அவர் மீது நட வடிக்கை எடுக்க கோரி லஞ்ச ஒழிப்புபோலீசாருக்கு மனு அனுப்பியும் பலன் இல்லை. எனவே எனது மனு அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்றம், அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கடந்த 1996 ஆம் ஆண்டில் திருத்தங்கல் பேரூராட்சி துணைத்தலைவராக பதவி வகித்ததில் இருந்து தற்போது வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துகள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டது.இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் சார்பிலும், தமிழக பொதுத்துறை செயலாளர் சார்பிலும் மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைத்து அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றில், “விசாரணையின் அடிப்படையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல்நடவடிக்கை கைவிடப் பட்டது” என குறிப்பிடப்பட்டது.முடிவில், ராஜேந்திரபாலாஜி மீதான புகார் குறித்த விசாரணை ஆவணங்கள் அனைத்தையும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்ட னர்.ஆகஸ்ட் 27 செவ்வாயன்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கின் விசாரணையில், சொத்து வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்களை, தமிழக பொதுத்துறை செயலாளர் தரப்பில், சீலிட்ட கவரில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு செப்டம்பர் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது.