tamilnadu

img

சிபிஎம் வேட்பாளருக்கு ராஜஸ்தான் தொழிலாளர்கள் ஆதரவு

இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு இயக்கம், பொதுக்கூட்டம் மற்றும்  பிரம்மாண்ட மாநாடுகளை நடத்தி வருகிறது. செவ்வாயன்று தோட் நகரில் நடைபெற்ற  பிரம்மாண்ட தொழிலாளர்கள் மாநாட்டில் பொதுமக்கள், கட்சி ஊழியர்கள், 1000-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து மற்றும் மண்டல தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கலந்து கொண்டு உரையாற்றினார். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் சார்பில் வேட்பாளராக களமிறங்கும் உஸ்மான் கான் (சிகார்), அம்ரா ராம், (தந்தா ராம்கர்) மற்றும் பெமா ராம் (தோட்) ஆகியோருக்கு ஆதரவளிப்பதாக மாநாட்டில் பங்கேற்ற தொழிலாளர்கள் உறுதியளித்தனர்.