tamilnadu

இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர் முக்கிய செய்திகள்

காருக்கு தீ வைப்பு  

இராஜபாளையம், மே 30- இராஜபாளையத்தைச் சேர்ந்த சீனி வாசன் முடங்கியாறு சாலையில் உள்ள பண்ணையார் ஆர்ச் அருகே நாய் பண்ணை நடத்தி வருகிறார். இவர் தனக்கு சொந்த மான காரை பண்ணையின் முன்புறம் நிறுத்தி வைப்பது வழக்கம்.  இவரிடம் ஓட்டுநராக பணியாற்றி வரும் வீரபிரகாஷ் என்பவருக்கும், இவரது சகோ தரர் கௌதம் என்பவருக்கும் நேற்று இரவு நாய் பண்ணை முன்பு சண்டை நடந்துள் ளது. இருவரையும் சீனிவாசன் விலக்கி யுள்ளார். அப்போது சீனிவாசனுடன் கௌதம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து சென்ற கௌதம், நள்ளிரவு மது போதையில் சீனிவாசன் காருக்கு தீ வைத்துள்ளார். தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் தீயை அணை த்தனர். கௌதம் கொடுத்த புகாரின் பேரில் இராஜபாளையம் தெற்கு காவல்துறை யினர் கௌதமிடம் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

சொத்துத் தகராறு கொலையில் முடிந்தது

சின்னாளபட்டி, மே 30- திண்டுக்ல் மாவட்டம் சித்தையன்கோட் டையை அடுத்துள்ள சேடபட்டியில் சொத்து பிரச்னையில் ஒருவர் கொலை செய்யப் பட்டார். இது தொடர்பாக, தம்பி உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சித்தையன்கோட்டை அருகே சேடபட்டி யை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆனந்தன் (57). திருமணமாகாதவர். இவருக்கு சொந்த மான வீட்டை தங்கை சாந்திக்கு கொடுப்ப தற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். இவ ரது தம்பி செல்வராஜ் (52) மற்றும் குடும் பத்தினர் இதை எதிர்த்து வந்துள்ளனர். வெள்ளிக்கிழமை இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது செல்வ ராஜை, அவரது மனைவி சரஸ்வதி (48), மகன் மணிகண்டன் (24), ஆகியோர் மண் வெட்டி கம்பால் தாக்கினர். காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் அனு மதிக்கப்பட்ட செல்வராஜ், சிகிச்சை பல னின்றி இறந்தார். செம்பட்டி காவல்துறை யினர் மூவரையும் கைது செய்தனர்.

திருநங்கைகளுக்கு நிவாரணப் பொருட்கள்  

திருவில்லிபுத்தூர், மே 30- விருதுநகர் மாவட்ட சட்டப்பணி கள் ஆணைக்குழு சார்பில்  திருநங்கை களுக்கு நிவாரணப்பொருட்களை நீதிபதி கள் வழங்கினார். கொரோனா ஊர டங்கால் அவர்கள் வாழ்வாதாரமின்றி தவித்துவரும் நிலையில் இந்த முயற்சி யை நீதிபதிகள் மேற்கொண்டனர். சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில்,  மாவட்ட முதன்மை நீதிபதியும் விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வின் தலைவருமான முத்து சாரதா நிவா ரணப் பொருட்களை வழங்கினார். நிகழ் வில் வன்கொடுமை தடுப்பு நீதிபதி சுமதி சாய்பிரியா தலைமை குற்றவியல் நீதிபதி சரண், சார்பு நீதிபதிகள் சுந்தரி, கதிரவன் விரைவு நீதித்துறை நீதிபதி சந்திரகாச பூபதி, நீதித்துறை நடுவர் எண் 2 நீதிபதி பரம்வீர், சட்டப்பணிகள் ஆணைக் குழு வின் செயலர் நீதிபதி மாரியப்பன், சமூக ஆர்வலர் விஜயா மற்றும் நீதித்துறை ஊழி யர்கள் கலந்துகொண்டனர்.

கண்டனோரி கண்மாயை தூர்வார வலியுறுத்தல் 

விருதுநகர், மே 30- விருதுநகர் அருகே உள்ள செவலூர் கண்டனோரி கண்மாயை தூர்வாரி விவ சாயத்தை பாதுகாக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.  மனுவில் கூறியிருப்பதாவது:- விருது நகர் அருகே உள்ளது செவலூர் கிராமம். இங்குள்ள கண்டனோரி கண்மாய் தூர்வா ரப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. கண்மாயின் உட்பகுதி முழு வதும் சீமைக் கருவேல மரங்கள் நிரம்பி யுள்ளன. இதனால் கண்மாய்க்கு தண்ணீர் வருவதில்லை. வடகிழக்குப் பருவ மழை தொடங்கும் முன்பாக செவலூர் கண்ட னோரி கண்மாயை தூர்வார வேண்டும். இந்தக் கண்மாய் நிரம்பினால், அரு கிலுள்ள புதுக்கோட்டை, கவுண்டம்பட்டி, கொத்தனேரி, குமிழங்குளம், கிருஷ்ணம நாயக்கன்பட்டி, பர்மா காலனி, லட்சுமியா புரம், குமாரபுரம் உள்ளிட்ட பத்து கிராம மக்கள் பயன் பெறுவர் என மனுவில் கூறப்பட்டுள்ளது.