மன்னார்குடி:
ரயில்வேயில் கடை நிலை ஊழியராகவாவது ஆகி விடலாம் என்ற இளைஞர்களின் இந்தியக் கனவையும் டிஜிட்டல் சக்திமான் மோடிஜி அழித்து விட்டார். தென்னகரயில்வேயில் மட்டும் 2393 அடிப்படை நான்காம் நிலை( குரூப் டி) நிரந்தர பணியிடங்களை முன்னாள் ராணுவத்தினர்களுக்கு அளித்து 12.9.2019 தேதியிட்ட அதற்கான பட்டியலையும் ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது.
இவர்களது சான்றிதழ்கள் ஆவணங்கள் சரி பார்க்கும்பணி 20.9.2019 துவக்கப்படுவதாகவும் இவர்களது மருத்துவ சோதனை முடிந்த உடனேயே அவரவர்களுக்கான நியமன ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத்தினருக்கான இந்த மறு வேலை வாய்ப்பு முற்றிலும் மாத தொகுப்பூதிய முறையில் ஒப்பந்த அடிப்படையிலானது.பாய்ண்ட்ஸ் மேன் ஹெல்ப்பர் உள்ளிட்ட நான்காம் நிலை கடை நிலை ஊழியர்களாக நியமிக்கப்படவிருக்கும் இவர்களுக்கு சென்னை, திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் ரூ.27072-உம், திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களில் ரூ. 24660-உம், பிற நகரங்களில் ரூ.22968-உம்மாதம் தொகுப்பூதியமாக வழங்கப்படும் என்றும் ஆண்டு தோறும் ரூ.5000 சீருடைக்காக வழங்கப்படவிருப்பதாகவும் தென்னக ரயில்வேயின் 13.8.2019 அறிவிப்பு தெரிவிக்கிறது.குறைந்தது ராணுவத்தில் பிரிவு 1 சான்றிதழ் அல்லதுஅதற்கு இணையான தகுதி உள்ள 15 ஆண்டுகள் ராணுவசேவை முடித்த 13.8.2019 அன்று ஐம்பது வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே இதற்கு தகுதியானவர்கள். ஐம்பது வயதிற்குட்பட்ட முன்னாள் ராணுவத்தினர் இப்பணிகளில் இணைந்த பின்னே சராசரியாக 15 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தென்னக ரயில்வே மண்டலத்தையும் சேர்த்து பதினெட்டுமண்டலங்கள் இந்திய ரயில்வேயில் உள்ளன. இவைகளிலும் முன்னாள் ராணுவத்தினருக்கு மறுவேலையை பிஜேபிஅரசு வழங்கும் என தெரிகிறது. இதில் மறைந்திருக்கும் மிகப்பெரிய அபாயம் வறிய நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு ரயில்வேயில் இனி வேலை வாய்ப்பு அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளது என்பது தான். இதைப் பற்றி டிஆர்இயு-வின் உதவி பொதுச்செயலாளர்டி. மனோகரன் கூறும்போது, எல்லா மண்டலங்களிலும் எங்கள் அமைப்பு இதை எதிர்த்து போராட்டங்களை முன்னெடுக்கும் என்றார்.
41-வது கவசப்படையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் இதைப் பற்றிக் கூறும்போது, ராணுவ பென்சன் வாங்கும்எனக்கு கேள்விப்படும் போதே ஒரு வகையில் இது மகிழ்ச்சியே. ஆனால் 18, 20 வயதில் என்னுடைய இரண்டுமகன்கள் வீட்டில் இருக்கும் போது நான் எங்கோ ஒரு ஊருக்கு ரயில்வே வேலைக்கு செல்வதாக கற்பனை செய்தாலேமனதை நெருடுகிறது என்றார்.ஏற்கனவே கோடிக்கணக்கான இந்திய இளைஞர்கள் வேலைவாய்ப்பற்று ஏங்கி வாடும் போது இது ஒரு அராஜகமான முடிவாகும். முன்னாள் ராணுவத்தினருக்கு இந்த வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதால் இந்திய படையணிகளுக்கு சாதகமான ஒரே அரசு என கருத்தை உருவாக்குவதற்கும் இதற்கு எதிராக பெரும் எதிர்ப்பை உருவாக்க முடியாது என நயவஞ்சகமாக பிஜேபி அரசு கருதுவதாகவும் தெரிகிறது.(ந.நி)