tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

  1. மணிப்பூரின் நோனி மாவ ட்டத்தில் உள்ள துபுலில் ரயில்வே கட்டுமான தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேலும் இரண்டு உடல்கள் மீட்பு. இதன்மூலம் நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளதாக மீட்புப் பணி அதிகாரி தகவல்.
  2. மலேசிய மாஸ்டர்ஸ் பேட் மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட இந்தி யாவின் பி.வி.சிந்து காலி றுதியில் சீன தைபேவின் டாய் ட்ஜூ யிங்கிடம் 21-14, 18-21, 21-18  என்ற செட் கணக்கில் வீழ்ந்து தொடரில் இருந்து வெளியேறினார். 
  3. “பாஜக ஒன்றும் இந்து தெய்வங்களின் பாதுகா வலர் அல்ல. ‘காளி தேவி’ யை எப்படி வழிபட வேண்டும் என்பதை வங் காளிகளுக்குக் அவர்கள் (பாஜக)  கற்பிக்க வேண்டியதில்லை” என  திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பதிலடி கொடுத்துள் ளார்.
  4. வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 15.5 விழுக்காடாக இலங்கையின் மத்திய வங்கி அதிகரித்துள்ளது. இலங்கையின் பணவீக்க விகிதம் 54.6 விழுக்காட்டையும். உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் 80.1 விழுக்காட்டையும் எட்டியுள்ளதால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 21 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி விகிதம் அதிகரித்திருக்கிறது.
  5. ஈரானில் உளவு பார்த்ததாக பல்வேறு வெளிநாட்டவர்களை அந்நாட்டின் உளவுத்துறை கைது செய்திருக்கிறது. இவர்கள் உளவு பார்த்ததை ஆளில்லா விமானங்கள் படம் பிடித்துள்ளன. நுழையக்கூடாது என்று பலகைகள் தொங்கவிடப்பட்ட பல்வேறு பகுதிகளுக்குள் இவர்கள் நுழைந்து, வெளியில் வந்ததை அந்த ஆளில்லா விமானங்கள் எடுத்த படங்கள் காட்டுகின்றன. உளவு வேலையில் ஈடுபட்டவர்களில் பிரிட்டனின் துணைத் தூதுவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  6. தென் கொரியாவின் தென்பகுதித் தீவான ஜெஜூவில் மீன் பிடிக்கும் படகுகள் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. முதலில் ஒரு படகில் தீப்பிடித்து, அது பின்னர் வேறு இரண்டு படகுகளுக்கும் தீ பரவியது. மூன்று பேர் காயமடைந்துள்ளனர். மேலும் இரண்டு பேரைக் காணவில்லை என்று தென் கொரியாவின் கடலோரக் காவற்படை தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கருதுவதால் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி தேடுதல் பணி நடந்து வருகிறது.