tamilnadu

க.பொன்முடியையும் குறிவைத்தது ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை!

சென்னை, ஜூலை 17 - தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, அவரது மகனும் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யு மான கவுதம சிகாமணி ஆகியோருக்குச் சொந்தமான சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள வீடு உட்பட மொத்தம் 9 இடங்களில், அமலாக்கத் துறையினர் திங்களன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.  விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறை கிராமத்தில்  2006 - 2011 வரையிலான காலத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ. 28 கோடி யளவில் வருவாய் இழப்பை ஏற்படுத்திய தாக, தற்போதைய உயர்கல்வித் துறை  அமைச்சர் க. பொன்முடி, அவரது மகனும், கள்ளக்குறிச்சி எம்பியுமானபொன். கவுதம சிகாமணி, கட்சி நிர்வாகி கள் கோதகுமார், சதானந்தன், ஜெயச்  சந்திரன்  ராஜ மகேந்திரன், கோபிநாத்  ஆகிய 7 பேர் மீது கடந்த 2012-ஆம் ஆண்  டில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கில் தங்களை விடு விக்கக் கோரி பொன். கவுதம சிகா மணி எம்.பி. சென்னை உயர்நீதிமன்றத்  தில் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மீண்  டும் கடந்த ஒரு மாதம் முன்பு தொடங்கி  நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 11 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த வழக்கில்தான், தற்  போது திடீரென சட்ட விரோதப் பணப்பரி மாற்றம் ஏதும் நடைபெற்றிருக்கிறதா? என்ற கோணத்தில் அமலாக்கத்துறை இந்த விசாரணையில் இறங்கியிருப்ப தாகவும், சென்னை, சைதாப்பேட்டை, விழுப்புரம் என 9 இடங்களில் சோதனை யை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2008-ம் ஆண்டு இந்தோனேசியா, ஐக்கிய அரபு நாடுகளில் முறையான  உரிமம் பெறாமல் சட்ட விரோதமாக  முதலீடு செய்ததாக கூறப்படும் புகாரி லும் சோதனை நடைபெறுவதாக கூறப் படுகிறது. எனினும், திங்கட்கிழமை மாலை அமலாக்கத்துறை அதிகா ரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிட வில்லை. சென்னையிலுள்ள பொன் முடி இல்லத்தில் மட்டும் மொத்தம் 50 அதிகாரிகள் சோதனையில் ஈடு பட்டுள்ளதாக தெரிகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து வேலூர் நீதிமன்றமும், அதிகாரத்தை பயன்படுத்தி மாமியார் பெயரில் சொத்து வாங்கியதாக தொட ரப்பட்ட வழக்கில் எம்.பி., எம்எல்ஏ-க்கள்  மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமும் அமைச்சர் பொன்  முடி உள்ளிட்டோரை கடந்த வாரம்தான் விடுதலை செய்திருந்தது. இந்நிலையில்தான் அமலாக்கத் துறை 11 ஆண்டுகளுக்கு முந்தைய  நடவடிக்கையை திடீரென துவங்கி யுள்ளது.  எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்க ளில், அம்மாநில அமைச்சர்கள், தலை வர்களை, வருமான வரித்துறை, அம லாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புக்களைப் பயன்படுத்தி, மிரட் டும் நடவடிக்கைகளை ஒன்றிய பாஜக அரசு  தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. அண்மைக்காலமாக தமிழ் நாட்டின் ஆளும் கட்சியான திமுக-வுக்கு எதிராகவும் இந்த மிரட்டலைத் துவங்கியுள்ளது.

கடந்த ஜூன் 13 அன்று இரவு, அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலு வலகங்களில் சோதனை நடத்தி, அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. இதற்கு எதிராக செந்தில் பாலாஜியின்  மனைவி தொடர்ந்த வழக்கு, சென்னை  உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதி மன்றத்திலும் தற்போது நிலுவையில் உள்ளது. இதற்கிடையேதான், தமிழ்நாடு அமைச்சரவையில் மூத்த  அமைச்சராக இருக்கும் க. பொன்முடி யையும் குறிவைத்து ஒன்றிய பாஜக  அரசின் அமலாக்கத்துறை, திங்களன்று  அவருக்குத் தொடர்புடைய 9 இடங்க ளில் சோதனையில் இறங்கியுள்ளது. அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழ்நாடு மாநிலத் தலை வர் அண்ணாமலை, “பொன்முடி தனது  அமைச்சர் பதவியை பயன்படுத்திக் கொண்டு அரசு கருவூலத்திற்கு 28.4  கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி யிருக்கிறார். திமுக ஆட்சிக் காலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்ட என்.கே.கே.பி. ராஜா மற்றும் பூங்கோதை ஆலடி  அருணா ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், தமிழ்நாடு அரசுக்கு இழப்பை ஏற்படுத்திய அமைச்சர் பொன்  முடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவிநீக்கம் செய்வாரா அல்லது செந்  தில் பாலாஜியை பாதுகாப்பது போல்  பொன்முடியையும் பாதுகாப் பார்களா?” என கேள்வி எழுப்பி இருந்  தார். இந்நிலையில் தான், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்  வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  முன்பு செந்தில் பாலாஜி வீட்டுக்கும்  அமலாக்கத்துறை வரவிருப்பதை முன்கூட்டியே அண்ணாமலை கூறி யிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் இல்லாத நேரங்களில் நடக்கும் ரெய்டு

தமிழ்நாடு அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை ரெய்டு, பெரும் பாலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் இல்லாத நேரங்களிலேயே நடை பெறுகிறது. முன்னதாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜூன் 13 அன்று ஜப்பானில் இருந்த  நேரத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். தற்போது எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து  கொள்வதற்காக, முதல்வர் மு.க. ஸ்டாலின் பெங்களூரு புறப்படும் நேரத்தில்  அமைச்சர் பொன்முடியைக் குறிவைத்து அமலாக்கத்துறை இறங்கியுள்ளது.
 

எதிர்க்கட்சிகள் கூட்டத்தால் பாஜக எரிச்சல்

பயமுறுத்தும் தந்திரமெல்லாம் பலிக்காது: முதல்வர் பதிலடி

அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், பாஜகவின் இந்த பயமுறுத்தும் தந்திரங்கள் எதுவும் பலிக்காது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் திங்களன்று புறப்பட்டுச் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பீகாரிலும் அதை தொடர்ந்து கர்நாடகாவிலும் பாஜகவை வீழ்த்துவதற்காக கூட்டப்படும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் பாஜக அரசுக்கு எரிச்சலை தந்துள்ளது. அதனுடைய வெளிப்பாடுதான், ஒன்றிய அரசால் அமலாக்கத்துறை இன்று ஏவப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த பணியை வடநாட்டில் செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டிலும் காட்ட தொடங்கியுள்ளனர். ஆனால், அதைபற்றி எல்லாம் கிஞ்சித்தும் திமுக கவலைப்படவில்லை. பொன்முடி இல்லத்தில் அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்தப்படுகிறது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது 13 ஆண்டுகளுக்கு முன்பாக புனையப்பட்ட பொய் வழக்குதான் இது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தான், அமலாக்கத்துறை இந்த வழக்கில் நடவடிக்கையை எடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்புவதற்கான தந்திரம்தான் இது. அவற்றை சமாளிக்க எதிர்கட்சிகளாக இருக்கும் நாங்கள் தயார். அமலாக்கத்துறை சோதனையை பொன்முடி சட்டப்படி எதிர்கொள்வார். ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆளுநர் திமுக கூட்டணிக்காக தேர்தல் பரப்புரையை நடத்தி வருகிறார். தற்போது அமலாக்கத்துறையும் சேர்ந்துள்ளது. இதனால் தேர்தல் வேலை எங்களுக்கு சுலபமாக இருக்கும் என கருதுகிறேன். அமலாக்கத்துறை சோதனை எல்லாம் சகஜம், சர்வ சாதாரணம் இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.