tamilnadu

img

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ புத்தகம்

சென்னை,பிப்.18- தனது 23 ஆண்டு கால  வாழ்க்கை பயண சுவடு களை ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள புத்தகத்தை வரும் 28 ஆம் தேதி ராகுல்காந்தி வெளியிடுகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 1953 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம்  தேதி பிறந்தார். சென்னை  கிறிஸ்தவ கல்லூரி மேல் நிலைப் பள்ளியில், பள்ளிப் படிப்பை முடித்த மு.க. ஸ்டாலின், பட்டப்படிப்புக்கு முந்தைய கல்வியை விவே கானந்தா கல்லூரியில் படித்தார். தொடர்ந்து, 1973 ஆம் ஆண்டு மாநிலக் கல்லூ ரியில் பட்டப்படிப்பை முடித்தார். பள்ளி படிக்கும் போதே 1967-1968 ஆம் ஆண்டில், அரசியலில் ஈடுபட்டார். இந்த நிலையில், 1953ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரையிலான தனது  23 ஆண்டு கால வாழ்க்கை  பயணத்தை ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில்  முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் எழுதியுள்ளார். முதல் பாகமாக வெளிவரும் இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா வரும் 28 ஆம் தேதி (திங்கட்கிழமை) சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது.   இதில், ராகுல்காந்தி கலந்துகொண்டு, புத்த கத்தை வெளியிடுகிறார். இந்த விழாவில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க் கட்சி தலை வர் தேஜஸ்வி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மேலும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி  தலைவர்கள் கலந்துகொள் கின்றனர்.