திண்டுக்கல், செப்.18- தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அமைக்கப்பட்டால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படு வார்கள் என்று திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் பேசினார். திண்டுக்கல்லில் தமிழ்நாடு நெடுஞ்சா லைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் 25ம் ஆண்டு வெள்ளிவிழா மாநாடு, 9வது மாநில பிரதிநிதித்துவ பேரவை, சிறப்பு மாநில மாநாடு என முப்பெரும் விழா நடைபெற்றது. செவ்வாயன்று நடை பெற்ற இந்த மாநாட்டையொட்டி மாலையில் குமரன் பூங்காவிலிருந்து சாலைப்பணி யாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. பேரணியை நகராட்சி, மாநகராட்சி ஊழியர் சங்க மாநில தலைவர் முருகானந்தம் துவக்கி வைத்தார். பின்னர் மணிக்கூண்டில் நடைபெற்ற பொது மாநாட்டில் பங்கேற்ற திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் வாழ்த்திப் பேசினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு: ஒன்றிய அரசில் பாஜக பொறுப்பேற்ற பிறகு எல்லா துறையிலும், தனியார் மயத்தை புகுத்தியுள்ளது. விவசாயி உற்பத்தி செய்யும் பொருளுக்கு கட்டுபடியான விலை நிர்ணயிப்போம் என்று 10 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குறுதி அளித்தும் நிறைவேற்ற மறுக்கிற அரசாக உள்ளது. தில்லியில் ஓராண்டாக விவசாயிகள் போராடிய போதும் அந்த போராட்டத்தின் உணர்வை மதிக்காத ஒரு அரசாகத்தான் உள்ளது.
தனியார் துறையின் லட்சணம்
பாஜக ஒன்றிய அரசின் நோக்கம் எல்லாமே இந்தியாவை கார்ப்பரேட்டு களின் கையில் கொடுப்பது தான். இந்தியா வின் மிகப்பெரிய நிறுவனம் எல்.ஐ.சி. ஆயுள் காப்பீட்டுத் துறையில் எல்.ஐ.சி. தான் மிகச்சிறந்த சேவையாற்றிக் கொண்டிருக்கிறது. காப்பீடு செய்த அனை வருக்கும் முறையாக சலுகைகளையும், காலத்தில் பிரிமியம் தொகைகளையும் கொடுக்கிறது என்று சொன்னால் எல்.ஐ.சி. அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமாக, பொதுத்துறை நிறுவனமாக உள்ள காரணத்தால் தான் சாத்தியமாயிற்று. ஆனால் ஏராளமான தனியார் நிறுவனங்கள் மக்களிடம் முதலீடுகளை பெற்றுக்கொண்டு ஏமாற்றுகிற நிறுவனங் களாக உள்ளன. தேக்குமர வளர்ப்புத் திட்டம் என்ற பெயரிலும், பாக்குமரம் வளர்ப்புத் திட்டம் என்ற பெயரிலும் பல நிறுவனங்கள் வந்தன. மக்கள் பணத்தை வசூலித்து அதை சொத்துக்களாக வைத்திருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு அந்த மக்களுக்கு வழங்க வேண்டிய பங்கு தொகைகளை தந்ததில்லை. முதலீடு செய்த பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றின. இது தான் தனியார் துறையின் லட்சணம். எனவே தனியார்துறையாக உள்ள எந்த நிறுவனமும் மக்களுக்கு சேவையாற்றுகிற நிறுவனமாக இருக்காது.
காலாவதி ஆன சுங்கச்சாவடிகள்
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தமிழ்நாட்டில் 75 டோல்கேட்டுக்கள் உள்ளன. இதில் 9 டோல்கேட்டுக்கள் காலாவதி யாகிவிட்டன. இந்த டோல்கேட்டுக்களின் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் அந்த டோல் நிறுவனங்கள் சுங்கம் வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்பட்டு இந்த சாலைகளை தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து டோல்கேட்டுக்களில் வசூல் செய்ய குறிப்பிட்ட காலத்திற்கு வரையறை செய்யப்பட்டது. இப்போது எந்த காலவரையறையும் கிடையாது. காலவரையறை முடிந்த டோல்கேட்டுக் களில் 40 விழுக்காடு கட்டணம் குறைக்கப்படும் என்றார்கள். அது அமலாகவில்லை. இப்போது ஒவ்வொரு ஆண்டும் டோல் கட்டணம் உயர்த்தப்படும் என்று ஒன்றிய அரசு சொல்கிறது. இந்த டோல்கேட்டுக்களால் சாதாரண பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.
ரூ.49 ஆயிரம் சுங்கக் கட்டணம்
தூத்துக்குடியிலிருந்து கொல்கத்தா விற்கு ஒரு சரக்கு லாரி சென்று வர டோல்கேட் கட்டணமாக ரூ.49 ஆயிரம் செலவாகிறது என்று லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த டோல்கேட் சுங்கக் கட்டணம் அந்த லாரியில் சென்ற சரக்கு பொருளின் மீது விலையேற்றி விற்கப்படும். அந்த கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த சாலையில் டோல்கேட் வழியாக பயணிக்காதவர்கள் கூட இந்த கட்டண உயர்வால் பாதிக்கப்படுவார்கள். மத்திய நெடுஞ்சாலை ஆணையம் எவ்வாறு டோல்கேட்டுக்களை அனுமதித்திருக் கிறதோ, அதுபோல தமிழ்நாடு அரசு தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணை யத்தை அமைக்க முடிவு செய்திருப்பது தமிழ்நாட்டு மக்களை மேலும் துயரத்தில் தள்ளுகிற செயலாகும். நெடுஞ்சாலை ஆணையம் நெடுஞ்சாலைகளை பாதுகாக்கிற ஆணை யமாக இருக்காது. தனியார் துறை நிறு வனங்களை பாதுகாக்கிற ஆணைய மாகத்தான் இருக்கும். ஆகவே தமிழக அரசின் இந்த தனியார் மய போக்கிற்கு எதிராக களம் காணப்போவதாக இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மிகச்சரி யானது. அந்த தீர்மானம் வெல்வ தற்கான போராட்ட வியூகங்களை வகுத்து வெற்றி பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றென்றைக்கும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு ஆர்.சச்சிதானந்தம் பேசினார். இம்மாநாட்டிற்கு மாநிலத்தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். வரவேற்புக்குழுத் தலைவர் எஸ்.எம்.ஜெய சீலன் வரவேற்றார். பொதுச்செயலாளர் அம்சராஜ் தீர்மானங்களை விளக்கி பேசி னார். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநி லத்தலைவர் மு.அன்பரசு, நெடுஞ்சாலை பொறியாளர் சங்க முன்னாள் மாநி லத்தலைவர் எஸ்.கண்ணன், மாநிலத்தலை வர் டி.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆ.செல்வம் நிறைவுரையாற்றினார். பொருளாளர் இரா.தமிழ் நன்றி கூறினார்.