மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, ஜன. 6 - ஆளுநர் உரை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2022 ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் தமிழக ஆளுநர் அவர் கள் ஆற்றி இருக்கக் கூடிய உரை 2021 மே மாதம் முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு செய்திருக்கக் கூடிய பல்வேறு பணிகளை வரிசைப்படுத்தியிருக் கிறது. குறிப்பாக கோவிட் பெருந் தொற்று சம்பந்தமாக அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் மூலம்\அதிக சதவிகிதத்தில் தடுப்பூசிகள் போடப்பட்டது. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் முயற்சி, தொற்றின் காரணமாக இறந்தவர் களின் குடும்பத்திற்கு ரூ.50,000/- நிவாரணத் தொகை வழங்கப்பட்டது ஆகிய முன்முயற்சிகள் குறிப்பிடத் தக்கதாகும். மருத்துவ காப்பீட்டி னுடைய பயனாளிகளின் வருமான வரம்பு ரூ.72,000/- லிருந்து ரூ.1,20,000/- ஆக உயர்த்தப்பட்டுள் ளது. “மக்களை தேடி மருத்துவம்” என்ற திட்டத்திற்கு ரூ.257 கோடி செலவிடப்பட்டுள்ளது. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு “இன்னுயிர் காப்போம்” திட்டத்தின் மூலம் அரசே 48 மணி நேர மருத்துவ செலவுகளை ஏற்றுக் கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்கு வழங்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு 30.06.2022ல் முடிவுக்கு வருகிறது. கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, மழை வெள்ளத்தினால் ஏற்பட்டு ள்ள இழப்புகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு 30.06.2024 வரை இந்த இழப்பீடு வழங்குவதை நீட்டிக்க வேண்டுமென்று சரக்குகள் மற்றும் சேவை வரி மன்றத்தையும், நிதியமைச்சகத்தையும் ஆளுநர் உரை வற்புறுத்துவது சரியானது.
சதுப்பு நிலங்களிலும், சரணா லயங்களிலும் பறவைகள் மற்றும் வளம்மிக்க இயற்கை உயிரின பன்மை தன்மையையும் பாதுகாக்க அரசு எடுத்துள்ள முயற்சிகள் பாராட்டுக்குரியது. மீன்பிடி குறைவு காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு உதவித் தொகையை ரூபாய் 5,000/-லிருந்து ரூபாய் 6000/- மாக உயர்த்தியதன் மூலம் 1.22 லட்சம் மீனவ குடும்பங் கள் பயனடைந்துள்ளன. இந்த தொகை கணிசமாக உயர்த்தப்பட வேண்டிய தேவை உள்ளது. அரசுப் பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பொறியி யல் மற்றும் உயர் படிப்புகளுக்கு செல்லும்போது முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களின் கட்ட ணங்களை அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டை முதலீடுகளுக்கு உகந்த முதல் மாநிலமாக மாற்றிட முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தப்படுவதாக ஆளுநர் உரை கூறுகிறது. இருந்தபோதிலும், ஆலை மூடல்களும், வேலை வாய்ப்பு இழப்பும், தொழிலாளர் உரிமைகள் மறுப்பும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். சமீப த்தில் ஃபோர்டு கார் உற்பத்தி ஆலை மூடப்பட்டதும், ஃபாக்ஸ்கான் போராட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி களும் உதாரணமாக உள்ளன என்ப தை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். சிறுகுறு நிறுவனங்களு க்கு எதிர்பார்த்த அளவிற்கு தேவை யான ஊக்கமும், ஆக்கமும் ஆளு நர் உரையில் அளிக்கப்படவில்லை என்பது கவலையளிக்கிறது.
பட்டியலின பழங்குடியின மக்கள் உரிமைகளுக்கான ஆணை யம் அமைக்கப்பட்டதன் மூலம் நீண்ட கால கோரிக்கை நிறை வேற்றப்பட்டுள்ளது. ஆனால் அவர் களுக்கான உதவித் தொகைகளை உயர்த்துவது, புதிய விடுதிகள் துவங்குவது, பயிற்சி திட்டங்களை உருவாக்குவது போன்றவற்றிற்கு போதிய நிதி ஒதுக்கீடு தேவை. திராவிட முன்னேற்றக் கழக அரசு, அஇஅதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சியினரின் வகுப்புவாத, மக்கள் விரோத ஊழல் நிறைந்த சீர ழிவு நடவடிக்கைகளை முறியடித்து ஆட்சிக்கு வந்துள்ளது. மக்கள் நலத்திட்டங்கள், தரமான கல்வி, சுகாதாரம், படித்தவர்களின் வேலை வாய்ப்பு, மக்களின் நல்வாழ்க்கை, சமூக நீதி, கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்ட விஷயங்களில் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பு மக்களிடம் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான அரசு, தேர்தல் வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்துகிறது.