புதுதில்லி, ஏப்.13- கோவிட்-19 பெருந்தொற்றின் போது இரவு பகல் அயராது பாடு பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு அரசு பல்வேறு பாதுகாப்பு நட வடிக்கைகளை மேற்கொண்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது மக்களவை யில் பி.ஆர். நடராஜன் எழுப்பிய கேள்வியில், கடந்த இரண்டு வருட காலங்களில் கோவிட் -19 பெருந்தொ ற்றின் போது இரவு பகலாக அரசுத் துறைகள், மருத்துவமனைகள்/சிகிச்சையகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர் களுக்கு, அரசு ஏதேனும் சிறப்பு பலன்கள்/ஊக்கத் தொகைகள்/ இழப்பீடுகள்/சமூக பாதுகாப்பு வழங்கியுள்ளதா என்றும் ஆம் எனில் அதன் விபரங்கள் என்ன என்றும், மாநில/யூனியன் பிரதேச வாரியாக இந்த திட்டப் பய னாளிகளின் எண்ணிக்கை என்ன என்றும் கேட்டிருந்தார்.
இதற்கு ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி ப்ரவீண் பவார் எழுத்துமூலம் அளித்த பதில் வருமாறு: கோவிட் -19 ஐ சமாளித்துக் கொண்டிருக்கும் சுகாதாரப் பணி யாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை மேம்படுத்த இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஒப்படைக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் 2020 ஜூன் 18 அன்று, கோவிட் -19 பெருந்தொற்று காலத் தில், அதனோடு தொடர்புடைய பணி களில் உள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான ஊதியத்தை உரிய நேரத்தில் விடு வித்து அளிக்குமாறு, மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களை அறி வுறுத்தியுள்ளது.
‘ஆஷா’ (ASHA) பணியாளர் களின் கோவிட்-19 பெருந்தொற்று பணிகளின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் கோவிட் -19 சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடு பட்டுள்ள ‘ஆஷா’ பணியாளர் களுக்கு மாதந்தோறும் கூடுதல் ஊக்கத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்குமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதற்கான தொகையை, கோவிட்-19 சுகாதார முறை முன்தயாரிப்பு மற்றும் அவசர கால தொகுப்பு நிதியிலிருந்து உப யோகப்படுத்திக் கொள்ளுமாறு அறி வுறுத்தப்பட்டுள்ளது. 2020 செப்டம்பர் 29 அன்று தொற்று நோய் திருத்தச் சட்டம் அறிவிக்கப் பட்டது. இச்சட்டமானது சுகாதார சேவை பணியாளர்களுக்கு, வன்முறை நடவடிக்கைகளிலிருந்து கவனம் மற்றும் பாதுகாப்பை வழங்கு கிறது. 2021 ஜனவரி 16 அன்று கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்துதல் அறிமுக முன்னெடுப்பின் போது, முதல் முன்னுரிமை பிரிவினர்களில் ஒருவ ராக சுகாதாரப் பணியாளர்கள் அடை யாளப்படுத்தப்பட்டனர். கூடுதலாக கோவிட் -19 தடுப்பூசியின், மூன்றா வது “முன்னெச்சரிக்கை டோஸ்” செலுத்திக்கொள்ள சுகாதாரப் பணி யாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது.
2021 ஜூன் 30 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் “கோவிட் -19 பெருந்தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணைத்தொகை வழங்குவதற் கான வழிகாட்டுதல்களை” ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. இந்த வழி காட்டுதல்கள்படி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், கோவிட் -19 பெருந்தொற்றின் காரணமாக இறந்ததாக சான்றளிக்கப்பட்டதன் அடிப்படையில் இறந்த நபருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் கருணைத் தொகை அளிக்க பரிந்துரை செய்துள்ளது. பிரதம மந்திரி கரீப் கல்யாண் தொகுப்பு (PMGKP) கோவிட் -19 நோயாளிகளுடன் நேரடித் தொடர்பி லிருந்து கவனித்துக் கொள்ளும் மற்றும் அதனால் நோய்தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கும் சமூக சுகாதாரப் பணியாளர் மற்றும் தனி யார் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட, சுகாதாரப் பணியாளர் களுக்கு விரிவான தனிப்பட்ட விபத்து காப்பீடாக 50 லட்சம் ரூபாய் வழங்குவதற்கான காப்பீட்டுத் திட்டம் 2020 மார்ச் 30 அன்று துவங்கப் பட்டது.அதன்படி தமிழகத்தில் 131, கேரளாவில் 38 காப்பீடுகள் அளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் பதி லளித்துள்ளார். (ந.நி.)