சென்னை,பிப்.1- தஞ்சாவூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலை வர் டி.வில்சன் தலைமை வகித்தார். அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்பு ராஜன், மாநில பொதுச் செய லாளர் பி.ஜான்சிராணி, மாநில துணைத் தலைவர் ப.சு.பாரதி அண்ணா, மாநிலச் செயலாளர் ஜீவா, மாநிலப் பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில பொதுச் செயலாளர் பி.ஜான் சிராணி கூறியதாவது: வருவாய் துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத்திற னாளிகளுக்கான உதவித் தொகை ரூ.1,500 கேட்டும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2,000 கேட்டும், விண்ணப்பித்து ஆண்டுக் கணக்கில் மாற்றுத் திறனாளிகள் காத்திருக் கும் நிலை உள்ளது. விண் ணப்பித்து காத்திருப் போருக்கு உடனே உதவித் தொகை வழங்க வேண்டும். குறைதீர் கூட்டம் நடத்துக! மாநில தலைநகரத்தில் இரு மாதங்களுக்கு ஒரு முறை, வருவாய் நிர்வாக ஆணையர் தலைமை யில், மாற்றுத் திறனாளி களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண் டும். மாற்றுத் திறனாளிக ளுக்கான துறை அமைச்சர், கூடுதல் அரசு செயலா ளர்கள், அனைத்து துறை அரசு செயலாளர்கள், அலு வலர்கள் பங்கேற்கும் வகை யில், மாற்றுத்திற னாளிகள், சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கூட்டம் நடத்தப் பட வேண்டும். மகளிர் உதவித்தொகை திட்டத்தில் உள்ள குளறுபடி களை சரி செய்து, மாற்றுத் திறனாளிகள் உள்ள குடும் பத்தினருக்கு உதவித் தொகை கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட வழி பாட்டு தலங்கள், வங்கி, மருத்துவமனை, அரசு அலு வலகங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வசதிகள் செய்து தர வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத் திற்கான சம்பள பாக்கியை வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.