சண்டிகர்,மார்ச் 12- பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 92 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் சிங் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தார். அதன்படி விரைவில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூடி அவரை முதல்வராக முறைப் ்படி தேர்வு செய்வார்கள். இந்நிலையில் பகவந்த் மான் சிங், சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன் வாரிலால் புரோகித்தை சந்தித்து, மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரி னார். இதனைத்தொடர்ந்து பகவந்த் மான் சிங் செய்தி யாளர்களிடம் கூறுகையில், “நான் ஆளுநரை சந்தித்து, எங்கள் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை அளித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினேன். பதவியேற்பு விழாவை எங்கு நடத்த வேண்டுமோ அங்கெல்லாம் சொல்லுங்கள் என்றார். இது பகத் சிங்கின் சொந்த கிராமமான கட்கர் கலனில் மார்ச் 16 அன்று மதியம் 12.30 மணிக்கு நடைபெறும். பஞ்சாப் முழுவதும் உள்ள வீடுகளில் இருந்து மக்கள் விழாவிற்கு வருவார்கள், அவர்களும் பகத்சிங்குக்கு அஞ்சலி செலுத்துவார்கள். எங்களிடம் ஒரு நல்ல அமைச்சரவை இருக்கும், வரலாற்றுச் சிறப்புமிக்க முடி வுகள் மற்றும் இதுவரை எடுக்கப்படாத முடிவுகள் எடுக்கப்படும். எனவே, நீங்கள் காத்திருக்க வேண் டும்” என்று தெரிவித்தார்.