tamilnadu

img

சென்னையில் கட்டுமான தொழிலாளர்கள் பேரணி

சென்னை, செப். 13 - நலவாரியத்தில் எடுக்கப்பட்ட முடி வுகளுக்கு அரசாணை வெளி யிட்டு அமல்படுத்தக் கோரி புதனன்று (செப்.13) கட்டுமானத் தொழி லாளர்கள் தலைமை செயலகம் நோக்கி பேரணி நடத்தினர். கட்டுமான தொழிலாளர் நலவாரி யத்தின் 35,36, 37வது கூட்டங்களில் தொழிலாளர் நலன் சார்ந்து ஏராள மான முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றிற்கு அரசாணை வெளியிட்டு செயல்படுத்த வேண்டும். ஓய்வூ தியத்தை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்,  60 வயது நிறைவடைந்த நாள் முதல் ஓய்வூதியம் தர வேண்டும். பெண் தொழிலாளிக்கு 50வயது முதல் ஓய்வூதியம் வழங்க வேண்டு மென்ற வாரிய முடிவை செயல்படுத்த வேண்டும்,ஓய்வூதியத்தை மாதந்தோறும் 10ஆம் தேதிக்குள் தர வேண்டும், கல்வி உதவித் தொகை யை முதல் வகுப்பு முதல் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடை பெற்றது. இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தின் (சிஐடியு)  மாநிலத் தலைவர் கே.பி.பெருமாள் தலைமை யில் எழும்பூரிலிருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடை பெற்றது.

பேரணியை சிஐடியு மாநிலச் செயலாளர் கே.சி.கோபிகுமார் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், “கட்டுமான தொழி லாளர்களுக்கு இஎஸ்ஐ,பிஎப் போன்ற  சட்டச்சலுகைகள் இல்லை. நலவாரி யத்தில் 2ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க முடிவெடுக்கப்பட்டாலும் அதை அமல்படுத்தாமல் உள்ளனர். வேலையில்லாத காலத்தில் நிவாரணம் வழங்க வேண்டும்; பொங்கல், தீபாவளிக்கு போனஸ் தர வேண்டும்; தொழிலாளர்களின் குழந்தைகளின் படிப்புக்கு ஒன்றாம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்; தேர்தல் கால வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” என்றார். சம்மேளன பொதுச்செயலாளர் டி.குமார் குறிப்பிடுகையில், “அரசு  வழங்கும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதி யம் போதுமானதாக இல்லை. அத னை உயர்த்தி வழங்க வேண்டும். வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பித்த வர்களில் பலருக்கு உதவித்தொகை கிடைக்காமல் உள்ளது. இந்நிலை யில் 24 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த பேரணி நடைபெறு கிறது” என்றார். இப்போராட்டத்தில் சிஐடியு மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மாநில துணைப்பொதுச் செயலாளர் வி.குமார், துணைத் தலைவர் ஆர்.சிங்காரவேலு, சம்மேளன பொருளாளர் லூர்துரூபி,  துணைத்தலைவர் கே.தங்கமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியை தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை செயலாளர் குமார் ஜெயந்த்தை சந்தித்து சங்க த்தின் தலைவர்கள் மனு அளித்து பேசினர்.