திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை சார்பில் 2030 ஆம் ஆண்டுக்குள் நீடித்த வளர்ச்சி இலக்குகளை தமிழ்நாடு முழுவதுமாக அடையும் வகையில் அரசின் செயல்பாடுகள் குறித்த புத்தகங்கள் மற்றும் இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமையன்று (மார்ச் 4) வெளியிட்டார். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநில திட்டக்குழு துணைத்தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன்,தலைமை செயலாளர் வெ.இறையன்பு,கூடுதல் தலைமை செயலர் விக்ரம்கபூர், ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் தரேஷ்அகமது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.