tamilnadu

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குக : சிஐடியு வலியுறுத்தல்

விருதுநகர், ஜன.1- பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பாதிக் கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தின ருக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று சிஐடியு-பட்டாசு தீப்பெட்டித் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.முருகன், மாவட்டச் செய லாளர் எம்.மகாலெட்சுமி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது : விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு  அருகே உள்ள களத்தூரில் தனியாருக்கு சொந்தமான ஆர்.கே.வி.எம். பட்டாசு ஆலையில் புத்தாண்டு தினத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், சம்பவ இடத்திலேயே 4 தொழிலாளர்கள் உயிரி ழந்தனர். மேலும்  8 பேர் படுகாயமடைந்த னர்.  இதனால், பட்டாசுத் தொழிலையே நம்பி வாழும் தொழிலாளர்களின் குடும் பத்தினர் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.  எனவே, தமிழக அரசானது, பாதிக்கப் பட்டுள்ள குடும்பத்தினரின் துயரைப் போக்கும்  வகையில்  உயிரிழந்த தொழிலா ளர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையும், காயமடைந்த தொ ழிலாளர்களுக்கு காயத்தின் தன்மைக்கு ஏற்ப ரூ.2 லட்சம் முதல் 3 லட்சம் வரை நிவாரணமாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தியுள்ளனர்.