பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்காதே!
அனைத்துத் தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 3- கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக குடும்ப த்துக்கு தலா ரூ.7,500 வழங்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 6 மாத காலத்திற்கு உணவுப் பொ ருட்களை இலவசமாக வழங்க வேண்டும். பொதுத்துறை நிறு வனங்களை தனியார் மயமாக்க கூடாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கொரோனா கால உயிர் இழப்புக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்க வேண்டும். கொரோனா தொற்றை தடுக்க ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். நலவாரியம் அறிவித்த நிவாரணங்களை தாம தமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்ப ட்டினம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்க ளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி
திருச்சி தென்னூர், மன்னார்புரம், ஸ்ரீரங்கம், துறையூர், மணப்பாறை, முசிறி, லால்குடி உட்பட அனைத்து பிரிவு அலு வலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியா ளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலை மை வகித்தார். திருச்சி தலைமை தபால் நிலையம் அரு கில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் சிஐடியு மாநகர் மாவ ட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். துவா க்குடியில் சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். இதில் சிஐடியு புறநகர் மாவட்டச் செய லாளர் சிவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முசிறி கைக்காட்டி அருகே சிஐடியு புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மண்ண ச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் சிஐடியு புற நகர் மாவட்டக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் தலைமையி லும், மணப்பாறை பேருந்து நிலையம் அருகே சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஷாஜகான், ஏஐடியுசி தலைவர் உசேன் ஆகியோர் தலைமையிலும், மருங்காபுரி வட்டா ட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு பொறுப்பாளர் அழகர்சாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொன்னமராவதி
பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சாலையோர வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் சாத்தையா தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.பக்ருதீன், சிஐடியு மாவ ட்ட துணைச் செயலாளர் ஏ.தீன், வாலிபர் சங்க பொறுப்பா ளர் கே.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அற ந்தாங்கி பேருந்துநிலையம் அருகே கே.தங்கராஜ் தலைமை யில் நடைபெற்றது.
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்தில் 300 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் தலைமைத் தபால் நிலையம் முன்பு சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், ஏஐடியுசி மாவ ட்டச் செயலாளர் ஆர்.தில்லை வனம், ஐஎன்டியூசி மாவட்டச் செயலாளர் மோகன் ராஜ், தொமுச மாவட்டச் செயலாளர் கு.சே வியர், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் ராஜன் ஆகி யோர் தலைமை வகித்தனர். தரைக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் மணிமாறன் தலைமையில், மங்களபுரத்திலும், தஞ்சை விரைவுப் போக்குவரத்து பணிமனை முன்பு, சிஐடியு மத்திய சங்க துணைச் செயலாளர் பி.வெங்கடேசன் தலைமையிலும், தஞ்சை நகர் பணிமனை முன்பு ஏஐடியூசி செயலாளர் சுந்தரபாண்டியன் தலைமையிலும், தஞ்சை புறநகர் பணிமனை முன்பு சிஐடியு மத்திய சங்க துணைச் செயலாளர் காரல் மார்க்ஸ் தலைமையிலும், சின்ன ஆஸ்பத்திரி அருகில் ஆட்டோ சங்க மாநகரச் செய லாளர் சுரேஷ் தலைமையிலும், தஞ்சை ரயிலடியில் டிஆர்இயு சார்பில் செயலாளர் கண்ணன் தலைமையிலும், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையிலும், சுமைப்பணி சங்க தலைவர் சீனி வாசன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவ லக வாயிலில் தமிழ்நாடு மின்தொழிலாளர் சம்மேளனம் மாவ ட்டச் செயலாளர் தங்கவேலு தலைமை வகித்தார். மின் ஊழி யர் மத்திய அமைப்பு மாநில துணைத் தலைவர் எஸ்.ராஜா ராமன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். அய்யம்பேட்டையில் மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகி பி.காணிக்கைராஜ் தலைமையிலும் சேதுபாவா சத்திரத்தில் மீன்பிடித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.சுப்பிரமணியன் தலைமையிலும் நடைபெற்றது. செ ங்கிப்பட்டியில் சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் விஜய குமார் தலைமை வகித்தார். இதேபோல் புதுக்குடி, பூதலூர், திருவையாறு, ஊரணி புரம், ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, பேரா வூரணி உள்ளிட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
கும்பகோணம்
சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்கம் இணைந்து 5 இடங்களில் ஆ ர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டப் பொருளாளர் கண்ணன், சாலை போக்குவரத்து மாநில துணைச் செயலா ளர் பார்த்தசாரதி, ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் ஜெயக்கு மார் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்கள் கலந்து கொண்ட னர்.
திருவிடைமருதூர்
திருவிடைமருதூர், திருபுவனம், திருமங்கலகுடி, எஸ். புதூர், திருபுவனம் டாஸ்மாக், ஆவணியாபுரம் ஆகிய இடங்க ளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட துணைத்த லைவர் சா.ஜீவபாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம்
அவுரித் திடலில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மண்டலச் செயலாளர் தம்பித்துரை தலமை வகித்தார். சிஐ டியு மாவட்டத் துணைத் தலைவர் வி.மாரிமுத்து சிறப்புரை யாற்றினார். ஒக்கூரில் எம்.ஜி.பக்கிரிசாமி தலைமை வகி த்தார். கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பி.செல்வராஜ் விளக்கவுரையாற்றினார்.
அரியலூர்
ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு, நெசவா ளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் அரசு போக்கு வரத்து தொழிலாளர்கள் சங்கம் இணைந்து ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டன. கைத்தறி நெசவு தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.என்.துரைராஜ் தலைமை வகி த்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பின்னர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் மனு அளித்தனர். அரி யலூர் அண்ணா சிலை முன்பு சிஐடியு மாவட்டச் செயலா ளர் பி.துரைசாமி தலைமையிலும், செந்துரையில் பி.அழகு துரை தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூர்
பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு சிஐ டியு பொது தொழிலாளர் சங்க நிர்வாகி பி.ரெங்கராஜ் தலைமை வகித்தார். ஸ்டேட் வங்கி முன்பு கட்டுமான தொழி லாளர் சங்கம் சீனீவாசன் தலைமை வகித்தார். சிபிஎம் பெரம்பலூர்-ஆலத்தூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.பி.டி. ராஜாங்கம் முன்னிலை வகித்தார். புதிய பேருந்து நிலை யம் முன்பு சிஐடியு ஆட்டோ சங்கம் சி.சண்முகம், ரெங்கநா தன், மல்லீஸ்குமார், தீரன்நகர் பகுதியிர் எல்பிஎப் மாவட்டச் செயலாளர் சின்னசாமி, எஸ்.ஞானசேகரன் மற்றும் நான்கு ரோடு மின்வாரிய அலுவலகம், சங்குபேட்டை, அரசு மருத்து வமனை, தபால் நிலைய அலுவலகம், போக்குவரத்து பணி மனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
அரசு ஊழியர் சங்கம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தஞ்சாவூர் வடக்கு வட்டம் சார்பில், பனகல் கட்டிடம், வணிக வரித்துறை அலுவலகம், கூட்டுறவுத்துறை அலுவலகம் உள்ளிட்ட மூன்று இடத்தி லும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு வட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கோ தண்டபாணி, முன்னாள் மாநில செயலாளர் பன்னீர்செ ல்வம் கருத்துரையாற்றினர். வட்ட செயலாளர் இளங்கோவன் நன்றி கூறினார். குடவாசலில் அரசு ஊழியர் சங்கத்தின் வட்டத் தலைவர் தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். நாகப்பட்டினம் நகராட்சி அலுவலகத்தின் முன்பு வட்டச் செயலாளர் எம்.தமிழ்வாணன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் து.இள வரசன் தலைமையேற்றார். மாவட்டச் செயலாளர் அ.தி.அன்ப ழகன் விளக்கவுரையாற்றினார்.நாகை வட்டார வளர்ச்சி அலு வலகம், மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம், சீர்காழி, குத்தாலம், கீழ்வேளூர், வேதாரணியம் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்சூரன்ஸ், வங்கி, அரசு ஊழியர் சங்கம், தொ லைத் தொடர்பு, மணல் வண்டி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொ ட்டி இயக்குபவர், கட்டுமானம், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.