சென்னை, ஜூன் 27 - சென்னை மாநகராட் சிக்கு உட்பட்ட 5, 6 வது மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியை தனியார் மயமாக்கப்பட உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 வார் டுகள் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 7 மண்டலங்களில் உபேசர் நிறுவனமும், 4 மண்டலங்களில் ராம்கி நிறுவனமும் குப்பை அள்ளும் பணியை செய்கின்றன. இதன் தொடர்ச்சியாக 5 மற்றும் 6வது மண்டலங்க ளில் குப்பை அள்ளும் பணியும் தனியாருக்கு கொடுக்கப்பட உள்ளது. இதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய அமைப்புகளின் மத்திய சென்னை மாவட்டக்குழுக் கள் எதிர்ப்பு தெரிவித் துள்ளன. மாநகராட்சியின் முடிவை கைவிட வலியுறுத்தி தொடர் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தி வருகின்றன. மாந கராட்சியில் 10 ஆண்டு களுக்கு மேல் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், தனி யார்மயத்தை முழுமையாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்த பிரச்சா ரம் நடைபெறுகிறது.
துறைமுகம் பகுதி
துறைமுகம் பகுதி 56வது வட்டம் பிஆர்என் கார்டன் பகுதியில் ஞாயி றன்று (ஜூலை 25) மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்கி யது. சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, வாலிபர் சங்க பகுதி ஒருங் கிணைப்பாளர் உமாநாத், பகுதி நிர்வாகிகள் மகேஸ் வரி, சுமைப்பணி தொழிலா ளர் சங்க பொதுச்செயலாளர் இரா. அருள் குமார், வீரா சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எழும்பூர் பகுதி
எழும்பூர் கே.பி. பார்க் பகுதியிலிருந்து தொடங்கிய பிரச்சாரத்தில் சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.சீனிவாசுலு, 98வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சித்தார்த்தன், மாநில குழு உறுப்பினர் நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சேப்.-திருவல்லிக் கேணி பகுதி
சேப்பாக்கம் - திருவல் லிக்கேணி பகுதியில் திங்களன்று (ஜூன் 26) பிரச்சாரம் தொடங்கியது. 63வது வட்டம் ஜி.பி ரோடு, பார்டர் தோட்டம், களிமண் புரம் வீதிகளில் மக்களை சந்தித்து உரையாடினர். இந்த பிரச்சாரத்தில் வாலிபர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.விக்னேஷ்வரன், பகுதி நிர்வாகிகள் நாகராஜ், மைக்கல், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.ஆறுமுகம், பகுதிச் செயலாளர் கவிதா கஜேந்தி ரன், பகுதி குழு உறுப்பினர் கள் ஆர்.கபாலி, தா.அன்பழ கன், சுமை பணி சங்க நிர்வாகி கோவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பிரச்சார இயக்கங் களில் மாதர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஏ.சாந்தி, செய லாளர் வி.தனலட்சுமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.மணி கண்டன், பொருளாளர் பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.