சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி மே 27-இல் ஆர்ப்பாட்டம்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவிப்பு
ஈரோடு, ஏப்.26 - சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மே 27 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ள தென தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவித்துள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக் குழு கூட்டம், மாநிலத் தலைவர் த.செல் லக்கண்ணு தலைமையில் ஈரோட் டில் வெள்ளியன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மதுரை, உத்தப் புரம் முத்தாலம்மன் கோவிலில் அனைத்து சமூக மக்களுக்கும் வழிபாட்டில் சம உரிமை என உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கிய பின்பும், பட்டியல் சாதி மக்கள் பொங்கல் வைத்து வழிபடு வதைத் தடுத்த மதுரை புறநகர் மாவட்ட காவல்துறையின் நடவடிக் கையை மாநிலக்குழு கண்டிக் கிறது. பட்டியலின மக்கள் பொங் கல் வைத்து வழிபட அரசு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். ஈரோடு மாவட்டம், ஈங்கூர் மற்றும் திருப்பூர் மாவட்டம், முதலி பாளையம் பகுதிகளில் உள்ள பட்டியலின மக்களுக்காக சிப்காட் வளாகத்தில் கட்டப்பட்ட தொழிற் கூடங்களை, பட்டியலின தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஈங்கூரில் தாட் கோவிற்குச் சொந்தமான 48 ஏக்கர் காலியிடத்தை தனியாருக்கு வழங்கியிருப்பதை ரத்து செய்து பட்டியலின மக்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இல்லை யெனில், சிப்காட்டிலிருந்து 50 ஏக்கர் நிலத்தை பட்டியலின மக்க ளுக்கு வழங்க வேண்டும். அண்ணா மறுமலர்ச்சி திட்டத் தின்கீழ், கிராம ஊராட்சிகளுக்கு சமத்துவ மயானம் அமைக்க தலா ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப் படுகிறது. இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியில் சமத்துவ மயானம் அமைக்காமல், சாதிக் கொரு மயானம் அமைப்பதற்கே நிதி பயன்படுத்தப்படுவதாகத் தெரிய வருகிறது. இதனைத் தடுத்து சமத்துவ மயானம் அமைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் சாதிவாரி கணக்கெ டுப்பை நடத்த ஒன்றிய, மாநில அரசு கள் முன்வர வேண்டும். தனியார் துறையில் இடஒதுக்கீட்டை அமல் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 27 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங் களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முன்னதாக, இக்கூட்டத்தில் மாநில சிறப்புத் தலைவர் எஸ்.கே. மகேந்திரன், பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், பொருளாளர் இ.மோகனா, மாநில உதவித் தலைவர் வீ.அமிர்தலிங்கம், மாநிலக் குழு உறுப்பினர்கள், ஈரோடு மாவட்டத் தலைவர் பி.பி.பழனி சாமி, செயலாளர் எம்.அண்ணா துரை உட்பட பலர் கலந்து கொண்ட னர்.