பழனி, மே 16 பழனி திருக்கோவிலுக்கு நாள்தோ றும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கி றார்கள். இவர்களில் மாற்றுத்திறனா ளிகளும் வயதானவர்களும் அடக்கம். இவ்வாறு வருகை தரும் மாற்றுத்திறனாளி பக்தர்களின் கோரிக்கைகளை நிறை வேற்ற தேவஸ்தான நிர்வாகம் முன்வர வில்லை. பலமுறை போராட்டம் நடத்தியும் கூட மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் போக்கானது தொடர்கதையாக உள்ளது. இதனைக் கண்டித்தும் உடனடியாக தேவஸ்தான நிர்வாகம் மாற்றுத்திற னாளிகளின் கோரிக்கைகளை நிறை வேற்றித்தர வலியுறுத்தியும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மே 16 செவ்வாயன்று தேவஸ்தான அலுவலகம் முன்பு கால வரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஈடுபட்டனர்.
பழனி கோவிலுக்கு வருகைதரும் மாற்றுத்திறனாளிகளை முன்னுரிமை அடிப்படையில் செல்ல தமிழக அரசு அரசானை பிறப்பிக்கப்பட்டுள்ள போதி லும் இன்றுவரை மாற்றுத்திறனாளிகளை வின்ச், ரோப்கார், அன்னதானக்கூடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் முன்னுரிமையில் செல்ல பல நேரங்களில் அனுமதிப்பதில்லை. இதை மாற்றி மாற்றுத்திறனாளிகளை பாதுகாவலர் ஒருவருடன் முன்னுரிமையில் செல்ல அனுமதிக்க வேண்டும். பழனியாண்டவர் ஆண்கள் கலைக் கல்லூரியில் உள்ள அனைத்து கட்டி டங்களிலும் கைப்பிடியுடன் கூடிய சாய்வு தளம், வெஸ்டர்ன் கழிப்பறை வசதி செய்து கொடுக்க வேண்டும். இன்னும் திறக்கப்பாடாமல் உள்ள மனநல காப்பகத்தை உடனடியாக திறக்க வேண்டும்.பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் இமிடங்கள் அனைத்திலும் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம், வெஸ்டர்ன் கழிப்பறை வசதி செய்து கொடுக்க வேண்டும். கோசாலையில் உள்ள மாடுகளை மாற்றுத்திறனா ளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மாவட்ட தலைவர் ஜெயந்தி, மாவட்ட செயலாளர் பகத்சிங், நகர செயலாளார் தங்கவேல், நகர பொருளாளர் சி.எம் .அய்யனார் ஆகியோர் பேசினர். கோவில் நிர்வாகம் ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்ததின் பெய ரில் காந்திருப்பு போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது.