சிறு குறு நிறுவனங்களை பாதுகாப்பது இடதுசாரி மாடலே!
று குறு நிறுவனங்களை பாது காப்பது இடதுசாரி மாடலே என்று அம்பத்தூரில் நடைபெற்ற கருத்தரங் கில் தலைவர்கள் தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டை யொட்டி “தேசத்தை சூறையாடும் கார்ப்பரேட்டுகளும் - பாதுகாக்கப் படாத சிறு குறு தொழில்களும்” என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் அம்பத்தூரில் செவ்வாயன்று நடை பெற்றது. வடசென்னை மாவட்டக்குழு உறுப்பினர் மா.பூபாலன் தலைமை தாங்கினார். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறு வனங்கள் அசோசியேஷன் கோவை மாவட்ட தலைவர் டி.மணி பேசுகை யில், “சிறு குறு நிறுவனங்கள்தான் 40 விழுக்காடு வேலை வாய்ப்பை தருகிறது. ஏற்றுமதியில் 50 விழுக்காடு பங்களிக்கின்றன. ஆனால் அரசால் கைவிடப்பட்டவையாக உள்ளன. அண்மையில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வால் மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள அரசு தொழில் முனைவோர்க ளுக்கு தனி வங்கி தொடங்கி, குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது. கேரளா வில் 3.5 லட்சம் சிறு குறு நிறுவனங்கள் புதிதாக உருவாகியுள்ளன. 7.5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உரு வாக்கப்பட்டுள்ளன. சிறு குறு நிறுவனங்களை காப்பீடு செய்ய 50 விழுக்காடு தொழில் முனைவோர், 50 விழுக்காடு அரசு வழங்குகிறது” எனக் கூறினார். பெருநிறுவனங்களுக்கு ஆதரவான அரசு கொள்கைகள் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் பேசுகையில், “நோக்கியா நிறுவனம் 638 கோடி ரூபாய் முதலீடு செய்தது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் போ டப்பட்டது. இரண்டாவது ஒப்பந்தத் தின்படி, இங்கு விற்பனை செய்யப் படும் தொலைபேசிக்கான மதிப்பு கூட்டு வரியையும், சென்ட்ரல் விற்ப னை வரியையும் அந்த நிறுவனத்தி டம் திருப்பிக் கொடுப்பது என முடி வெடுக்கப்பட்டது. அதன்படி 638 கோடி ரூபாயை நோக்கியா நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு திருப்பிக் கொடுத்தது” எனக் கூறினார்.
மேலும்,”நிசான் ரெனால்டு நிறுவ னம் வழக்கு தொடுப்பேன் என அரசை மிரட்டியதைத் தொடர்ந்து, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் மக்களின் வரிப் பணத்தில் இருந்து 1,500 கோடி ரூபா யை தமிழ்நாடு அரசு வழங்கியது. ஆனால் சிறு குறு நிறுவனங்களை பாதுகாக்க அரசு முன்வருவதில்லை. 18 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதா கவும், கடந்த 10 ஆண்டுகளில் 9 லட்சம் கோடி ரூபாய் கடனைத்தான் பெரு முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்துள் ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். ஒன்றிய அரசு அடுத்த 5 ஆண்டுகளில் சிறு குறு நிறுவ னங்களுக்கு ரூ.1.5 லட்சம் கோடி கடன் கொடுப்போம் என்று அறிவித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே. 5.23 லட்சம் சிறு குறு நிறுவனங்களுக்கு இது மிகவும் குறைவு” என கே.கனகராஜ் விமர்சித்தார். “2008ஆம் ஆண்டு உலகப் பொரு ளாதார நெருக்கடியில் சீனாவும், இந்தி யாவும் தப்பியது. சிறு குறு நிறு வனங்கள் வேலைவாய்ப்பு பெரும ளவில் பாதிக்கப்படாத அளவிற்கு கை கொடுத்தன என சீன அரசு கூறி யது. இந்தியாவிற்கு பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாப்பு அரணாக இருந்ததாக மன்மோகன் சிங் கூறினார்” என்று சுட்டிக்காட்டினார். “சிறு குறு நிறுவனங்களை பாது காப்பது மட்டுமல்லாமல், வேலை வாய்ப்பை உறுதிப்படுத்துவது, உள்ளூர் பொருளாதார வளர்ச்சியின் அம்சமாக வும் இருக்க வேண்டும். இந்த அரசு பெருமுதலாளிகளுக்கு ஆதரவான அரசாக உள்ளது. சிறு குறு நிறு வனங்களை பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பு, தொழிலாளி வர்க்கத்தின் கடமை” என வலி யுறுத்தினார். நிகழ்ச்சியில் வரவேற்புக்குழு தலைவர் எஸ்.கே.மகேந்திரன், சாடியா ஒருங்கிணைப்பாளர் கே.கிருஷ்ண சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். அம்பத்தூர் பகுதிச் செயலாளர் ஆர்.கோபி நன்றி கூறினார்.