tamilnadu

பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாப்போம்: அமைச்சர்

சென்னை,ஏப்.5- மீன் உற்பத்தியை பெருக்குதல், மீனவர் மற்றும் மீன்வளர்போரின் வருவாய் உயர்த்துதல் மற்றும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அரசின் மீனவளக் கொள்கையின் முக்கிய அம்சம் என்று அமைச்சர் அனிதா ஆர். ராதா கிருஷ்ணன் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதனன்று(ஏப்.5) மீனவளம் மற்றும் மீனவர் நலத்துறை மானியக் கோரிக்கை  மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, கொள்கை விளக்க  குறிப்பை தாக்கல் செய்தார். அதில், நாட்டிலேயே தமிழ்நாடு 1,076 கி.மீ நீளமுள்ள இரண்டாவது கடற்கரையை கொண்டுள்ளது. கடந்த ஆண்டில் 5.95 மெட்ரிக் டன் மீன் உற்பத்தி செய்து ஏற்றுமதி  செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.6,560 கோடி அந்நிய செலாவாணி ஈட்டப்பட்டது. பாக். நீரிணை பகுதியில் 2,490 விசைப் படகுகள், 12,443 இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள் மற்றும்  1,020 நாட்டுப் படகுகள் பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளன. பாக்.நீரிைண பகுதி மாவட்டங்களிலுள்ள 286 மீனவ கிராமங்களில் 2,08,827 மீனவ மக்கள் வாழ்கின்றனர். 

பாக். நீரிைண பகுதியிலுள்ள ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் வாழும் சுமார் 80,000 மீனவர்கள் தங்கள் வாழ்வாதரத்திற்காகவும், பெரும்பான்மையான கடலோர மக்கள் மறைமுகமாகவும் தங்களது வாழ்வாதரத்திற்காக பாக். நீரிைணயின் பாரம்பரிய மீன்டிப்பை சார்ந்துள்ளனர். நமது மீனவர்கள் தங்களது பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடிக்கும்போது சர்வதேச கடல் எல்லையை கடப்பதாக கூறி இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். இலங்கை அரசால் நமது மீனவர்கள் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்படுகின்றனர். மற்றும் மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த நிகழ்வுகள் மீனவர்கள் மத்தியில் கவலையையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, மீனவர்கள் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்ச னைக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவு மீதான இந்தி யாவின் இறையாண்மையை மீட்டெடுப்பதன் மூலமே பாரம்பரியக் கடற்பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை மீட்டெடுக்க முடியும் என்பதை தமிழ்நாடு அரசு மீண்டும் வலியுறுத்துகிறது. இதற்கு முன்பு, அதிகப்பட்சமாக 113 நாட்கள் வரை இலங்கை சிறைகளில் அடைடக்கப்பட்டிருந்த நமது மீனவர்கள், தமிழ்நாடு அரசு எடுத்து முயற்சியால் மிகக்குறைந்த காலமான 13 நாட்களிலேயே தாய்நாடு திரும்பியுள்ளனர்.  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.