tamilnadu

img

ஆசையும் லட்சியமும் மண்ணோடு மண்ணானது...!

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பிரியா. சென்னை ராணி மேரி  கல்லூரியில் முதலாமாண்டு பட்டப் படிப்பு படித்து வந்தார். கால்பந்து போட்டிகளில் அதிகம் ஆர்வம் கொண்ட  அவர், 9 வயது முதல் கால்பந்தை உதைக்க தொடங்கினார். அவரது திறமையை பார்த்து முறைப்படி பயிற்சி  கொடுத்துள்ளார் சகோதரர். வியாசர்பாடியில் ஆண்கள் விளை யாடி வரும் மைதானத்தில் ஒரு பெண் குழந்தையாக காலடியெடுத்து வைத்தார். மூத்த வீரர்கள் பலரும்  ஆர்வத்துடன் பயிற்சி கொடுத்தனர். வெகுவிரைவில் உள்ளூர் போட்டிக ளில் விளையாடத் துவங்கினார். படிப் படியாக மாவட்ட, மாநில அளவிலான  போட்டிகளில் பங்கேற்று தனிமுத்தி ரைப் பதித்தார். ஒரு ரோனால்டோ, மெஸ்ஸியாக ெஜாலிக்க வேண்டும் என்கிற கனவுக ளுடன் தனது பயணதிட்டத்தை விரிவுப்படுத்தினார். அந்த ஆசை, கனவு, லட்சியங்களுக்காக தினமும் அதிகாலை 5 மணிக்கே பயிற்சிக்கு சென்றுவிடுவார். இந்த நிலையில், கடந்த சில  நாட்களுக்கு முன்பு மூட்டு வலி காரண மாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக முதலில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறி யதாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி யிருக்கின்றனர்.

 இதற்கிடையே, சென்னை கொளத்தூர், பெரியார் நகரிலுள்ள அரசு  புற நகர் மருத்துவமனைக்கு சென்றுள் ளார். அவரை பரிசோதித்த அரசு மருத்துவர்கள், வலது கால் மூட்டு பகுதியில் ஜவ்வு விலகியிருப்பதாக தெரிவித்து நவம்பர் 7ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு பிரியா வின் காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்ச் சியற்றதாக இருந்தது. இதனால், அவர் உடனே சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரை பரிசோதித்து மருத்துவர்கள், பிரியாவின் காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டு இருப்பதை கண்டு, உயிருக்கு ஆபத்து ஏற்படு வதை தவிர்ப்பதற்காக, உடனடியாக அறுவை சிகிச்சை செய்து வலது காலை அகற்றினர். அதன்பிறகு பிரியா  நலமாகவே காணப்பட்டார். இந்த நிலையில், அரசு மருத்துவ மனைக்கு சென்ற மருத்துவம் மற்றும்  மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர், பிரியாவை சந்தித்துள்ளார். அப்போது,  அவருடன் சில மணி நேரங்களில் உரை யாடியிருக்கிறார். ஒரு காலை இழந்த பிரியாவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தந்தை, சகோதரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பிறகு பிரியா வெளியிட்ட குறுஞ்செய்தியில் “மீண்டும் உயி ரோடு வருவேன். நம்பிக்கையுடன் இருங்கள்” என்று தெரிவித்திருந்தார். ஆனாலும், அவரது உறுப்புகள் ஒவ் வொன்றாக செயலிழந்ததைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (நவ. 15) காலை உயிரிழந்தார்.

மறியல்

மருத்துவர்களின் அலட்சியமான சிகிச்சையால் பிரியா உயிரிழந்தது தெரி யவந்ததையடுத்து, கோபமடைந்த பிரியாவின் நண்பர்கள், கல்லூரி மாணவர்கள் அனைவரும் அரசு மருத்து வமனை முன்பு ஒன்று திரண்டனர். பிரியாவின் உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றவிடாமல் தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சம்மந்தப்பட்ட மருத்து வர்களை கைது செய்ய வேண்டும் என  வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். மருத்துவர்கள் பணியிட நீக்கம் இதற்கிடையே ராஜீவ் காந்தி அரசு  மருத்துவமனைக்கு வந்த அமைச்சர்  மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு”என்றார் அறுவை சிகிச்சைக்கு பின்னர் கம்ரசர் பேன்டேஜை இறுக்கமாக கட்டி யதால்  ரத்த ஓட்டம் பாதித்து ரத்த நாளங்கள் பழுதாகி உள்ளது. மேல் சிகிச்சைக்காக 10ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு எலும்பு சிகிச்சை நிபுணர், மூட்டு நிபுணர்,  மயக்கவியல் மருத்துவர் உள்ளிட்ட வர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர் சிகிச்சை இருந்த போதும் மாணவி பிரியா உயிரிழந்தார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் உடனடி யாக மருத்துவ வல்லுனர் குழு ஒன்றை அமைத்து விசாரிக்க செய் தோம். பெரியார் நகர் அரசு மருத்து வமனையில் சிகிச்சை செய்த  மருத்துவர்களின் கவனக்குறைவும் காரணம் என்று தெரிய வந்தது.  உடனடியாக 2 மருத்துவர்கள் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் துறை ரீதியாக நடவ டிக்கை எடுக்கப்படும். காவல்துறை யினரும் விசாரணை நடத்தி வருகிறார் கள். அவர்களும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கூறினார்.

ரூ. 10 லட்சம் நிவாரணம்

பிரியாவின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 10 லட்சம்  நிவாரணம் வழங்கப்படும். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அமைச்சர்  அறிவித்துள்ளார்.

தந்தை குற்றச்சாட்டு

பிரியாவின் தந்தை ரவிக்குமார் கூறுகையில், தனது மகளுக்கு கால்வலி ஏற்பட்டுள்ளதாக கொளத்தூர் மருத்துவமனைக்கு சென்றபோது, ஜவ்வுதான் கிழிந்துள்ளது என்றும்  ஒரு மணி நேரத்தில் சரியாகி விடும் என மருத்துவர்கள் தெரிவித்த னர். ஆனால், அவர்கள் சிகிச்சையின் போது, அதிகளவு ரத்தம் வந்ததால், இறுக்கமாக கட்டு போட்டு விட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி விட்டனர் என குற்றம் சாட்டினார். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்டம் வந்தபிறகு சிகிச்சை மேற்கொள்வதாக மருத்துவர்கள் கூறியதாகவும், அதற்குள் காலில் ரத்தம் உறைந்து தன்  மகள் இறந்து விட்டதாகவும் வேதனை யுடன் தெரிவித்தார். மேலும், கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர்கள் 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளதை சுட்டிக் காட்டிய பிரியாவின் தந்தை ரவிக்குமார் மற்றும் உறவினர்கள் பிரியா இறப்பிற்கு காரணமான மருத்துவர்களை கைது  செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கேட்டுக்கொண்டனர்.

கால்பந்து வீராங்கனையான மாணவி பிரியாவின் கால்கள் அகற்றப்பட்ட சோகம் நீங்காத நிலை யில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்த சம்பவம் கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூராய்வு முடிந்து பிரியா வின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத் தனர். ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சொந்த வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். அங்கு சட்டமன்ற உறுப்பினர் தாயகம்  கவி, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக் குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் சரவணதமிழன் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.