tamilnadu

img

சங்ககிரி அருகே தனியார் பள்ளி வாகனம் விபத்து - 5 பேர் காயம்

இளம்பிள்ளை, மார்ச் 22- சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள சன்னியாசி பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிறுத்தம் பகுதியில் செவ்வாயன்று மாலை பள்ளி குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்த தனியார் பள்ளி வாகனம் மீது சரக்கு லாரி  மோதியது. இதில் பள்ளி வாகனத்தில் இருந்த பள்ளி குழந் தைகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.