tamilnadu

80 ஆயிரம் வணிகர்களிடம் கோடிக்கணக்கில் தனியார் நிதி நிறுவனம் மோசடி

சென்னை,டிச.19- தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் வணிகர்களிடம் கோடிக்கணக்கில் தனியார் நிறுவனம் மோசடி செய்துள்ளதால் அந்த நிறு வனத்தின்மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தருமாறு வணிகர்கள் வலியு றுத்தியுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம் உள்பட தமிழகம் முழுவதும் திரிபுரா சிட்ஸ் என்ற தனியார் நிறுவ னத்தில் வணிகர்கள் ஏலச்சீட்டில் முதலீடு செய்து கோடிக்கணக்கில் ஏமாந்துள்ளனர். இது தொடர்பாக கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரு கிறது. கடந்த 2 ஆண்டுகளாக மோசடி பணத்தை மீட்பதற்காக வணிகர்கள் போராடி வருகிறார் கள். இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் பேரவை சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.அருண் குமார் கூறும் போது, ‘‘தமிழகத்தில் சுமார் 80 ஆயிரம் வணிகர்கள் திரிபுரா சிட்ஸ்  நிறுவனத்தில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.20  லட்சம் வரை முதலீடு செய்து பாதிக்கப்பட்டுள்ள னர். அந்த நிறுவனம் கொடுத்த காசோலை கள் பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளன’’ என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வியாபாரிகள் கால வரையற்ற உண்ணாவிரதம் இருக்கவும் பொரு ளாதார குற்றப்பிரிவு அலுவலகம், தலைமை செயலகம், காவல்துறை ஆணையர் அலுவல கம் ஆகியவற்றையும் முற்றுகையிட முடிவு செய்துள்ளனர். எனவே அதிகாரிகள் இதில் தலையிட்டு பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு பணத்தை திரும்பப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.