tamilnadu

img

தாய்மொழிக்கு ஊக்கமளிக்க வேண்டும் தனியார் பள்ளிகளுக்கு முதல்வர் வேண்டுகோள்

சென்னை, மே 27- தாய்மொழிக்கு ஊக்கமளிக்கக் கூடிய பள்ளிகளாக தனியார் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். சென்னை பள்ளிக்கரணையில் டிஏவி பள்ளிக்குழுமத்தின் சார்பில் கட்டப்பட்ட புதிய பள்ளியை தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று (மே 27) திறந்துவைத்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “தங்கள் பள்ளி மட்டும் வளர்ந்தால் போதும் என்று நினைக்காமல், அரசுப்  பள்ளிகளும் உயர வேண்டும் என்ற  எண்ணத்தோடு உதவிக்கரம் நீட்டக் கூடிய தனியார் பள்ளியின் நோக்கத்தை மனதார பாராட்டுகிறேன்”என்றார். கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்கக்கூடிய வகையில் முன்முயற்சிகளை இந்த பள்ளி நிர்வா கம் எடுத்துள்ளது. அரசின் சார்பில், இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை  நாங்கள் அமல்படுத்தி வருகிறோம். இதன்மூலம் லட்சக்கணக்கான மாண வர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்துள் ளோம். அந்த மாணவர்களுக்கு கடந்த  இரண்டு ஆண்டு காலத்தில் விடுபட்ட பாடங்களை கற்பித்து வருகிறோம்.

தமிழக அரசு கல்விக்கு முக்கியத்து வம் தரக்கூடிய அரசாக அமைந்திருக்கி றது. பள்ளிக் கல்வியோடு நிறுத்தி விடாமல், கல்லூரிக் கல்வியையும், அதோடு உயர்கல்வி கொடுக்கும் அரசாக தமிழக அரசு திட்டமிட்டு செயல் பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் முதல்வர் கூறினார். தாய்மொழிக்கு ஊக்கமளிக்கக் கூடிய பள்ளிகளாக இதுபோன்ற தனியார் பள்ளிகள் செயல்பட வேண்டும். உங்களது மிகச் சிறப்பான திட்டங்களுக்கு தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும். தாய்மொழிப் பற்றும்,  தாய்நாட்டு பற்றும் ஒவ்வொரு மனி தருக்கும் மிகமிக முக்கியம் என்ற முறை யில், இந்த வேண்டுகோளை உங்க ளிடத்தின் வைக்கிறேன் என்றும் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.