மதுரை:
பிரதமரின் விவசாய நிதியுதவி (கிசான் சம்மான்) திட்டத்தில் தகுதியான பயனாளிகளுக்கு மத்திய அரசால் தலா ரூ. 2 ஆயிரம் வீதம் 3 தவணைகளில் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.இந்த ஆண்டில் தமிழகத்தில் இந்தத்திட்டத்தில் பெரிய அளவிலான மோசடி நடந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. இணைய வழியில் பயனாளிகளுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு வேளாண் அதிகாரிகள் பயன்படுத்த வேண்டியபாஸ்வேர்டை திருடி வேளாண்துறையின் கீழ்நிலை அலுவலர்கள் சிலர்,தனியார் இ-சேவை மைய ஊழியர்கள்மோசடியில் ஈடுபட்டனர். இது தொடர் பாக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரதமரின் கிசான் திட்ட மோசடிக்குதமிழக அரசே பொறுப்பு என பாஜக சொல்லிவிட்ட நிலையில் தமிழக அரசுபோலி நபர்களிடம் பணத்தை வசூலித்து வருவதாக கூறுகிறது.கிசான் மோசடியில் மதுரை மாவட்டமும் தப்பவில்லை.மதுரை மாவட்டத்தில் 16 ஆயிரத்து 474 பேர் இந்தத் திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 ஆயிரம் பேர் போலிகள் என்பது தெரியவந்துள்ளது.மதுரை மாவட்டத்தில் தகுதியற்றபயனாளிகளிடம் இருந்து அவர் களுக்கு வழங்கப்பட்ட தொகையை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக உயரதிகாரிகளைக் கொண்ட குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த மோசடி மதுரைஉள்ளிட்ட 13 மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது. சிபிசிஐடி காவல்துறையினர் இது தொடர்பாக சிலரை கைதுசெய்துள்ளனர்.