பிரதமர் நரேந்திர மோடி தனக்குத் தானே ‘வளர்ச்சி நாயகன்’ என்று பட்டம் சூட்டிக் கொண்டு பவனி வரு கிறார். ஆனால் உண்மையில், அவரை ‘ஊழல் நாயகன்’ என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். 2014 ஆம் ஆண்டில் அவர் பிரதமராக பொறுப் பேற்ற பிறகு, ஊழல் என்பது ஊற் றெடுத்து பெருகி ஓடிக் கொண்டிருக்கிறது. அண்மையில், மயில் இறகுடன் தண்ணீ ருக்குள் இறங்கி அவர் தவம் செய்வது போல போஸ் கொடுத்தார். ஆனால் அவரது ஆட்சி என்பது ஊழலில்தான் மூழ்கியுள்ளது. எந்த மயிலிறகை கொண்டும் அந்தக் கறையை அழித்து விட முடியாது. நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் 12 அறிக்கைகளை சிஏஜி அலுவலகம் தாக்கல் செய்தது. 1. ஒன்றிய அரசின் பாரத் மாலா திட்டம் 2. துவாரகா விரைவுப் பாதை 3. தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்தின் சுங்கச்சாவடி கட்டண வசூல் 4. ஆயுஷ்மான் பாரத் திட்டம் 5. அயோத்தி மேம்பாட்டுத் திட்டம் 6.கிராமப் புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வுத் திட்டம் 7. ஹிந்துஸ்தான் ஏரோநேட்டிக் விமான இன்ஜின் வடிவமைப்பு ஒன்றிய அரசின் ரயில்வே நிதி ஆகியவற்றில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக சிஏஜி பட்டியலிட்டார்.
இதன் மூலம் 7.5 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற் பட்டுள்ளது என்று சிஏஜி கூறியுள்ளார். பாரத் மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு திட்டமிட்ட தொகையான, கிலோ மீட்டருக்கு 15.37 கோடி ரூபாய்க்கு பதிலாக, இரண்டு மடங்கு கூடுதலாக செலவிடப்பட்டுள்ளது. 34 ஆயிரம் கிலோ மீட்டருக்குப் பதிலாக 13, 449 கிலோ மீட்டர் சாலை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக, ரூ.5 லட்சத்து 36 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டதில், பெரும்பகுதி ஒன்றிய ஆட்சியாளர்களால் “ஒதுக்கப்பட்டுவிட்டது” என்கிறது சிஏஜி அறிக்கை. ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.15.37 கோடி என மதிப்பிடப்பட்ட நிலையில், ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.32.17 கோடி செல விடப்பட்டுள்ளது. இதன்மூலம் தனியார் நிறுவனங்கள் வகைதொகையின்றி சுங்க கட்டண கொள்ளையில் ஈடுபடவும் வகை செய்யப்பட்டுள்ளது. துவாரகா நெடுஞ்சாலைத் திட்டத்தில் 29.6 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைக்கு ரூ.250.77 கோடி செலவிடப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட செலவு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.18.20 கோடிதான். ஆனால், ரூ.6,788 கோடி கூடுதலாக செலவிடப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்ப இஸ்ரோவுக்கான செலவு ரூ.480 கோடி. ஆனால், துவாரகா சாலைக்கு வெறும் இரண்டு கிலோ மீட்டருக்கு ஆன செலவு ரூ.500 கோடி. இவர்கள்தான் ஊழல் கறைபடியாத உத்தமர்கள் நாங்கள் என்று ஊரை ஏமாற்ற முயல்கிறார்கள். தில்லி, வதோரா, மும்பை நெடுஞ்சாலைத் திட்டத்திலும் பெரும் முறைகேடு நடந்துள்ளது. ரூ.44 ஆயிரம் கோடி செலவு செய்து அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்று சிஏஜி அறிக்கை கேள்வி எழுப்பியுள்ளது. இந்தத் திட்டத் திற்காக 74,778 மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளன. கார்ப்பரேட்டு களின் நலன்களுக்காக பழங்குடி மக்கள் தங்கள் வாழ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். இதேபோன்று தில்லியில் துவாரகா வையும், ஹரியானாவில் குர்கானையும் இணைக்கக் கூடிய வகையில் 29.6 கிலோ மீட்டர் நீளத்திற்கு 16 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. குறைவான மக்களே பயணிக்கும் இந்தச் சாலையில் எட்டு வழிச்சாலையே அவசியமில்லை. 16 வழிச்சாலை எதற்கு என்று கேள்வி எழுப்பியது சிஏஜி அறிக்கை. எங்கள் கார்ப்பரேட் கூட்டுக் களவாணிகள் பலன் பெற வேண்டும் என்பதே மோடி அரசு சொல்லாத பதிலாகும்.