tamilnadu

பிரதமர் மோடி ஜன. 12 புதுச்சேரி வருகிறார்

புதுச்சேரி,ஜன.4- புதுச்சேரியில் வரும் 12-இல் தேசிய இளைஞர் தினவிழாவை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருகிறார் என்று  துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரி வித்தார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதுச்சேரியில் 15 வயது  முதல் 18 வயது வரை உள்ள மாணவர்க ளுக்கு இதுவரை 454 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. பெற்றோர் அனுமதி கடிதம் தந்த பிறகே தடுப்பூசி போடப்படுகிறது” என்றார். இளைஞர்கள் உற்சாகமாகத் தடுப்பூசி செயல்படுவதைப் பார்த்து பெரி யோர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள  வேண்டும். புதுச்சேரியில் கொரோனா, ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அதிகப்படியான கட்டுப்பாடுகள் கொண்டு வர வாய்ப்பு உள்ளது.   அரசு  ஊழியர்களில் தடுப்பூசி போடாதவர்கள் விவரங்களை சேகரிக்கிறோம். அதற் கான அறிக்கையை சுகாதாரத்துறை பெறவுள்ளது எனவும் கூறினார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள தேசிய இளைஞர் தின  விழாவில் நாடு முழுவதுமிருந்து 7,500  இளையோர் பங்கேற்கின்றனர். இந்நிகழ்வை பிரதமர் மோடி வரும் 12ஆம் தேதி புதுச்சேரி வருகை தந்து துவக்கி வைக்க உள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் மட்டுமே  இந்நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்ப டுவார்கள். அதனால் தொடக்க நிகழ்வில் 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். புதுச்சேரி வரும் பிரதமர் காமராஜர் மணி மண்ட பத்தை காணொளியில் திறக்கிறார் என்றும் அவர்  கூறினார்.