tamilnadu

img

நாங்கள் எப்பொழுதும் சமரசத்திற்கு தயார்!

இந்தியாவின் பிரதமர் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதே இல்லை. ஆனால் கடந்த 19.12.2024 அன்று ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புடின் ஊடகங்களை சந்தித்தார். அமெரிக்கா உட்பட உலகின் அனைத்து ஊடகங்களும் அனுமதிக்கப்பட்டன. ரஷ்ய ஊடகங்கள் மேற்கத்திய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் உள்ள எவர் ஒருவரும் கேள்வி கேட்கலாம் என அறிவிக்கப்பட்டதில் சுமார் 22 லட்சம் கேள்விகள் வந்தன. கிட்டத்தட்ட 4 மணி நேரம்  ஊடக சந்திப்பு நடந்தது. மிக விரிவான அந்த நேர்காணலின்  முக்கிய அம்சங்களை தருகிறார் அ.அன்வர் உசேன்

கேள்வி: ரஷ்யாவின் தற்போதைய பொருளாதார நிலை?
புடின்: சென்ற ஆண்டு ரஷ்யாவின் ஜி.டி.பி. 3.6% வளர்ச்சி அடைந்தது. பல வர்த்தக தடைகள் போடப்பட்டாலும் நாங்கள் வளர்ச்சி அடைந்துள்ளோம். இன்று உலகிலேயே அதிக தடைகளை சந்திக்கும் நாடு ரஷ்யாதான். இந்த ஆண்டு வளர்ச்சி 3.9 அல்லது 4% இருக்கும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் ஐரோப்பிய நாடுகள் திணறிக் கொண்டுள்ளன. ஜெர்மனியின் வளர்ச்சி 0%. ஜப்பானை முந்தியுள்ளோம். எனினும் அமெரிக்கா/சீனா/இந்தியாவுடன் ஒப்பிடும் பொழுது ஜி.டி.பி. விகிதத்தில் முன்னேற வேண்டியுள்ளது. வேலை
யின்மை மிகவும் குறைந்துள்ளது. பணவீக்கம் குறித்து கவனமாக இருக்க வேண்டியுள்ளது.
கேள்வி: ஜெர்மனியின் 0% வளர்ச்சிக்கு காரணம்?
புடின்: எந்த ஒரு தேசம் தனது சுயசார்பை பாதுகாத்துக் கொள்ளவில்லை
யோ அது பின் தங்கிவிடும். பொருளாதாரம், தொழில்நுட்பம், ராணுவம் அனைத்திலும் சுயசார்பு அவசியம். ஜெர்மனி ஏன் அமெரிக்காவுக்காக தன்னை 
சிதைத்து கொள்ள வேண்டும்? அமெரிக்காவுக்காக ஏன் ரஷ்யாவுடன் மோத வேண்டும்? ஏன் விலை குறைந்த ரஷ்யாவின் எரிசக்தியை புறக்கணிக்க வேண்டும்? இது ஜெர்மனிக்கு மட்டுமல்ல; பல ஐரோப்பிய நாடுகளுக்கும் பொருந்தும்.
கேள்வி: ஒர்ஷினிக் ஏவுகணை குறித்து?
புடின்: ஒர்ஷினிக் ஏவுகணை ஏன் பயன்படுத்தப்பட்டது? அமெரிக்காவின் “அடாக்ம்ஸ்” மற்றும் பிரிட்டனின் “ஷேடோ ஸ்டார்ம்” நீண்ட தூர ஏவுகணை
களை ரஷ்யாவின் எல்லைக்குள் உக்ரைன் பயன்படுத்தியது. தாங்கள் தந்த வாக்குறுதியை மீறி இந்த ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த அனுமதித்தது மட்டுமல்ல; அவற்றை அந்த நாடுகளின் ராணுவத்தினர்தான் இயக்கினர். நாங்கள் திரும்பத்திரும்ப எச்சரித்தோம். ஆனால் அவர்கள் செவி
மடுக்கவில்லை. எனவேதான் ஒர்ஷினிக் பயன்படுத்தினோம்.
இன்று உலகில் ஒர்ஷினிக் போல வலுவான ஏவுகணை எந்த நாட்டிடமும் இல்லை. ஒர்ஷினிக் வினாடிக்கு 3 கி.மீ., அதாவது ஒரு மணி நேரத்தில் 11,000 கி.மீ.
பாயக்கூடியது. அதனை தடுக்கும் சக்தியோ அல்லது அறியும் ரேடார் வசதியோ அமெரிக்கா உட்பட யாரிடமும் இல்லை.
கேள்வி: ஒர்ஷினிக் திறன் குறித்து சந்தேகம்?
புடின்: நான் மேற்கத்திய ஆய்வாளர்களுக்கு சவால் விடுகிறேன். 21ம் நூற்றாண்டின் ஒரு தொழில்நுட்ப போட்டிக்கு நாம் தயாராவோம். உக்ரைனின் தலைநகரான கீவ் நகரத்தில் ஒரு குறிப்பிட்ட இலக்கை அவர்கள் சுட்டிக்காட்டட்டும். பின்னர் அவர்கள் பேட்ரியாட்/தாட் போன்ற எந்த வான் தாக்குதல் பாதுகாப்பு கருவிகளையும் அங்கு நிர்மாணிக்கட்டும். நாம் தேதி/நேரத்தை
பகிரங்கமாக அறிவித்துவிட்டு ஒர்ஷினிக்கை செலுத்துவோம். என்ன நடக்கிறது என பார்ப்போம். இந்த சவாலுக்கு நாங்கள் தயார்! அவர்கள் தயாரா?
கேள்வி: அணு ஆயுதக் கொள்கையில் மாற்றம்?
புடின்: அணு ஆயுதம் பயன்படுத்தும் கொள்கையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:
1. ரஷ்யாவுக்கு எதிராக அணு ஆயுதம் அல்லது அதற்கு இணையான அழிவு
ஏற்படுத்தும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டால் ரஷ்யா அணு ஆயுதம் பயன்படுத்தும்.
2. அணு ஆயுதம் உள்ள தேசத்துடன் அணு ஆயுதம் இல்லாத தேசம் ஒத்து
ழைத்து ரஷ்யாவின் இருப்புக்கு ஆபத்து விளைவித்தால், அந்த அணு ஆயுதம் இல்லாத தேசத்துக்கு எதிராகவும் பயன்படுத்தப்படும்.
3. பெலாரஸ்க்கு எதிராக அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால், ரஷ்யா அணு ஆயுதம் மூலம் எதிர்வினையாற்றும்.
கேள்வி: உக்ரைனில் தோல்வி கண்டுள்ளீர்களா?
புடின்: ரஷ்யா பலவீனமான தேசமாக இருக்க நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால் உங்களது மதிப்பீட்டிலிருந்து நான் வேறுபடுகிறேன். கடந்த 2-3 ஆண்டுகளைவிட இப்பொழுது ரஷ்யா வலுவாக உள்ளது. நாங்கள் சுயசார்புடன் இருக்கிறோம். யாரையும் எதிர்பார்த்து இல்லை. 
பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளோம். ஆயிரக்கணக்கான வர்த்தக தடைகளை தாண்டி முன்னேற்றம் கண்டுள்ளோம். ராணுவ ரீதியாக வலுவாக உள்ளோம். இன்று உலகிலேயே வலுவானதாகவும் தயார் நிலையில் உள்ளதும் ரஷ்ய ராணுவமே ஆகும். 
கடந்த மாதங்களில் ரஷ்ய ராணுவம் 100/200 என மீட்டர் கணக்கில் முன்னே
றிக் கொண்டிருந்தது. இப்பொழுது கி.மீ. கணக்கில் முன்னேறிக் கொண்டுள்ளது.
போர் களத்தில் ஒரு ரஷ்ய வீரரின் மரணத்துக்கு இணையாக 6 முதல் 8 உக்ரைன் வீரர்கள் மரணிக்கின்றனர். 
நேட்டோ நாடுகளின் ஒட்டுமொத்த உற்பத்தியைவிட அதிகமாக ஆயுதங்க
ளை நாங்கள் உற்பத்தி செய்கிறோம். உக்ரைனின் ஒரு குண்டுக்கு ரஷ்யா 10 முதல் 12 குண்டுகளை பயன்படுத்துகிறது. அமெரிக்காவிடம் இருக்கும் எந்த நவீன ஆயுதமும் எங்களிடம் இல்லாமல் இல்லை.
கேள்வி: சிரியாவில் தோல்வி உண்மையா?
புடின்: 2015ல் சிரியா அரசுக்கு நாங்கள் உதவ முன்வந்த பொழுது எங்க
ளின் ஒரே நோக்கம் அங்கு ஐஎஸ்எஸ் பயங்கரவாத அமைப்பின் (ISIS) அரசு அமையக்கூடாது என்பதுதான்! அது நிறைவேறி உள்ளது. அங்கு தற்போது அமைந்துள்ள ஆட்சி ஐஎஸ்ஐஎஸ் அல்ல. எங்களது ராணுவம் சிரியாவில் இருந்ததே இல்லை. எனவே எங்களுக்கு பின்னடைவு இல்லை. எங்களின் ஒரு விமான தளமும் கப்பல் தளமும் சிரியாவில் உள்ளது. இன்றைய ஆட்சி
யாளர்களுடன் பேசி வருகிறோம். அவர்கள் அனுமதித்தால் அவை தொடரும். இல்லையெனில் அவற்றை வேறு இடத்துக்கு மாற்றுவோம்.
கேள்வி: உக்ரைனுடன் சமரசம் சாத்தியமா?
புடின்: நாங்கள் எப்பொழுதும் பேச்சு வார்த்தைக்கும் சமரசத்துக்கும் தயாராக உள்ளோம். 2022 இறுதியில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஒரு
ஒப்பந்தம் கிட்டத்தட்ட கையெழுத்துக்கு தயாராக இருந்தது. அதனை சீர்குலைத்
தது யார்? அமெரிக்க நிர்வாகத்தின் ஆலோசனையில் உக்ரைனுக்கு வந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அதனை சீர்குலைத்தார். “கடைசி உக்ரைன்
வீரர் இருக்கும்வரை போரிடுங்கள்; நாங்கள் உதவுகிறோம்” என கூறினார். இன்று கெர்சோன், லுகான்ஸ்க், டோன்டெஸ்க், சபரோசியா பகுதிகள் வாக்கெடுப்பு
நடத்தி ரஷ்யாவுடன் இணைந்துள்ளன. இந்த புதிய சூழலிலும் நாங்கள் பேச்சு
வார்த்தைக்கு தயாராக உள்ளோம்.
கேள்வி: பிரிக்ஸ் அமைப்பின் அடுத்த நகர்வு?
புடின்: நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். பிரிக்ஸ் எவருக்கும் எதிரான அமைப்பு அல்ல. தங்களின் நலனுக்காக பரஸ்பர மரியாதையுடன் உருவான அமைப்பு. அது மேலும் விரிவடையும்.
கேள்வி: ரஷ்யா-சீனா உறவு?
புடின்: சீனாவும் ரஷ்யாவும் இராஜீய உறவுகள் தொடங்கி 75 ஆண்டுகள் பூர்த்தி ஆகியுள்ளன. இதனை இரு நாடுகளிலும் கொண்டாடுவோம். கடந்த 10 ஆண்டுகளில் உறவுகள் புதிய உச்சத்துக்கு சென்றுள்ளன. கடந்த ஆண்டில் 240 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது. 200 பில்லியன் டாலர்
மதிப்புள்ள சுமார் 600 கூட்டு நிறுவனங்களை நிர்மாணித்துள்ளோம். ஜனாதிபதி
ஜி ஜின்பிங் அரசியல் ரீதியாக மட்டுமல்ல; தனிப்பட்ட முறையிலும் எனக்கு நண்பர். இரண்டு நாடுகளும் ஐ.நா. அமைப்பில் முக்கிய பங்காற்றுகின்றன.
கேள்வி: யூடியூப் தடைக்கு காரணம்?
புடின்: யூடியூப் கூகுளின் நிறுவனம். அவர்கள் ரஷ்யாவில் துணை நிறு
வனங்களை உருவாக்கி செயல்பட்டனர். ஆனால் ஊழியர்களுக்கு ஊதியம் 
தருவதில் சுணக்கம் காட்டினர். அமெரிக்காவின் கட்டளைகளுக்கு அடிபணிந்து
ரஷ்யாவின் சட்டங்களை மீறினர். பலமுறை சுட்டிக்காட்டியும் அவர்கள் மாற
வில்லை. எனவேதான் தடை!
கேள்வி: இளைய தலைமுறைக்கு உங்கள் செய்தி?
புடின்: நீங்கள் தந்தையாகியுள்ளீர்கள். எனவே குழந்தைகளுக்கு என்ன சொல்ல வேண்டும் என்பதை உணர்வீர்கள். எந்த அறிவுரையையும் நான் சொல்ல தேவையில்லை. இளம் தலைமுறை தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவார்கள் எனும் நம்பிக்கை எனக்கு உள்ளது.
கேள்வி: துருக்கியின் நடவடிக்கைகள் குறித்து?
புடின்: இஸ்ரேலின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை என்பது எங்களது உறுதியான நிலைபாடு. பாலஸ்தீன மக்களுக்கு தனி தேசம் என்பதுதான் தீர்வு. சிரியாவில் துருக்கியின் செயல்பாடுகள் புரிந்து கொள்ள முடிகிறது. இன்று ஆட்சி அமைத்துள்ள சில குழுக்களுக்கு துருக்கி ஆதரவு தந்துள்ளது. எனினும் சிரியாவின் நிகழ்வுகள் இஸ்ரேலுக்குதான் பலன் அளிக்கும் என்பது எங்களது மதிப்பீடு. எர்டோகனுடன் தொடர்பில் உள்ளோம். அது தொடரும்.
கேள்வி: உக்ரைன் போர் உங்களில் ஏற்படுத்திய தனிப்பட்ட தாக்கம்?
புடின்: நான் அடிக்கடி நகைச்சுவை பேசும் நபர். உக்ரைன் போருக்கு பின்னர் எனது நகைச்சுவை உணர்வு பின்னுக்கு போய்விட்டது. நான் சிரிப்பதை மறந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன.