மதுரை/கோவை, பிப்.18- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிப்ரவரி 18 சனிக்கிழமை யன்று தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். புதுதில்லியில் இருந்து விமானப் படையின் தனி விமானத்தில் மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அப் போது குடியரசுத் தலைவரை தமிழ் நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச் சர் மனோ தங்கராஜ், வருவாய்த் துறை செயலர் குமார் ஜெயந்த், மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர். தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக குடியரசுத் தலைவர் முர்மு வந்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென் றார். அங்கு இந்துசமய அறநிலை யத்துறை சார்பில் முதன்மை செய லாளர் சந்திரமோகன், ஆணையர் முரளிதரன், அமைச்சர் மனோ தங்க ராஜ், கோவில் அறங்காவலர் சார்பில் தக்கார் கருமுத்து கண்ணன் ஆகி யோர் வரவேற்பு அளித்தனர்.
கோவிலுக்குள் வருகை தந்த குடி யரசு தலைவர் முர்முவுக்கு கோவில் சார்பில் சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். பின் னர் அவருக்கு மீனாட்சியம்மன் சிலை வழங்கப்பட்டது. பின்னர் அழகர்கோவில் சாலை யில் உள்ள அரசு சுற்றுலா மாளி கைக்குச் சென்றார். அதன்பின் விமா னம் மூலமாக கோவை சென்றார். கோவை விமானநிலையம் வந்த அவரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோதங்கராஜ், கோவை மாநகராட்சி மேயர் கல் பனா ஆனந்தகுமார், தமிழ்நாடு காவல்துறை தலைவர் சி.சைலேந்தி ரபாபு, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் ஆகி யோர் வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து திரௌபதி முர்மு, போலுவாம்பட்டி அருகே உள்ள ஈஷா யோகா மையத்தில் நடை பெறும் மகாசிவராத்திரி நிகழ்வில் பங்கேற்றார். ஈஷா மையத்துக்கு வருகை தர வேண்டாம் என எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.மறு நாள் ஞாயிறன்று குடியரசுத் தலைவர் உதகை செல்கிறார்.