மதுரை, மார்ச் 14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்றம் நிறை வேற்றிய நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக் கோரி நான் எழுதிய கடிதத்திற்கு “உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப் பட்டுள்ளதாக” குடியரசுத்தலைவர் மார்ச் 14 அன்று பதிலளித்துள்ளார். அரியலூர் மருத்துவக் கல்லூரி அரங்கத்திற்கு அனிதா வின் பெயர் சூட்டி மார்ச் 14 அன்று தமிழக முதல்வர் அறிவித்துள் ளார். மருத்துவ அரங்கும், மருத்துவக்கல்வியும் அனிதாக் களுக்கானது. அதைப் பறிப்பதை தடுக்கும் நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழகத்தின் கனவு அனிதாக்களின் கல்வி உரிமையை நிலைநாட்டுவதே. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.