tamilnadu

img

ரத்ததான முகாமை சிறப்பாக நடத்திய வாலிபர் சங்கத்திற்கு பரிசு, சான்றிதழ்

திருச்சிராப்பள்ளி, டிச.7- டிச.1 உலக எய்ட்ஸ் தினத்தை முன்  னிட்டு திருச்சி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு  மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் செவ்வாயன்று திருச்சி மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில் உறுதி மொழி ஏற்பு மற்றும் சமபந்தி போஜ னம் நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பிர தீப்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சி யில் இந்த ஆண்டின் மையக் கருத்தாக ‘‘சமத்துவத்தை அடைதல், நம்மை சோதனைக்கு உட்படுத்துதல், எச்.ஐ.வி.யை முடிவுக்குக் கொண்டு வர சமத்துவத்தை அடைதல்’’ என்ற  முழக்கம் முன் வைக்கப்பட்டு எய்ட்ஸ்  விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப் பட்டது.  பின்னர் கூட்டு மருத்துவ சிகிச்சைக்  காக சிறப்பாக பணியாற்றியவர்களுக் கும், சிறப்பான முறையில் ரத்ததான முகாம் நடத்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் நினைவு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இதில், வாலிபர் சங்கம் சார்பில் ரத்ததான முகாமை சிறப்பாக நடத்தியதற்காக வழங்கப்பட்ட நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்களை வாலிபர்  சங்க மாவட்டத் தலைவர் லெனின்,  மாவட்டச் செயலாளர் சேதுபதி, மாவட்ட பொருளாளர் நவநீதகிருண் ணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.  நிகழ்ச்சியில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் லெட்சுமி, மாவட்ட திட்ட மேலாளர் மணிவண்ணன் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்ட னர்.