tamilnadu

img

தேமுதிக பொதுச் செயலாளரானார் பிரேமலதா விஜயகாந்த்

சென்னை,டிச.14- தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள் ளார். தேமுதிக பொதுக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் வியாழனன்று (டிச.14) சென்னை திருவேற்காட்டில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க தேமுதிக தலைவர்விஜய காந்துக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்தை ஒருமன தாக தேர்வு செய்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. பின்னர் கட்சியின் பொதுச்செயலாளராக பதவி யேற்றுக் கொண்டார்.