tamilnadu

img

ஊற்று மணல் - செ.தமிழ்ராஜ் - செ.தமிழ்ராஜ்

கவிதைகள்
ஆசிரியர்: கவிஞர் ஜீவி
பக்கம் 80; விலை ரூ.120
வெளியீடு: காலம் வெளியீடு, மதுரை

காலம்தோறும் கவிதையின் மொழி  வடிவம் மாறிக்கொண்டே வந்திருக்கின றது. இலக்கணம் பிசகாமல் எழு தப்பட்ட மரபுக்கவிதைகள் காலமாற் றத்தில் புதுக்கவிதையாய், வசன  கவிதையாய், இருண்மை வழிந்தோ டும் நவீன கவிதையாய், மூன்று வரி களில் குழந்தையாய் சிரிக்கும் ஹைகூ கவிதைகளாய் தமிழ்மொழியை செழு மைப்படுத்திக் கொண்டே தனது கவிதா வடிவங்களில் அழகுபடுத்திக்கொண்டு காலத்தின் பதிவுகளாய் விரைந்தோடு கிறது மொழி.  பாசாங்கற்றசொற்கள் ஊற்றெ டுக்கும் ஆற்றங்கரை மணல்வெளியில் ராஜநடை நடந்து பழகியிருக்கின்றார் கவிதையுலகில் நீண்டதொரு பயணி யாய் தனித்துவமான கவித்துவத்தில் சிற கடித்திருக்கும் அன்புக் கவிஞர் ஜீவி தனது ஊற்றுமணல் கவித்தொகுப்பின் மூலம் எளிய சொற்களோடும் வலிய சிந்தனைகளோடும் காலத்தை பதிவு செய்திருக்கின்றார். 

கவிஞர் ஜீவி தமிழ்நாடறிந்த நல்ல தொரு சிந்தனையாளர். மரபுக்கவிதை யும் புதுக்கவிதையும் இவரது கவிதை களில் போட்டிபோடும். கவியரங்க மேடைகளில் மானுட சிங்கமாய் கர்  ஜித்து சொற்சிலம்பமாடுவார்.வள மார்ந்த கருமேகமென வார்த்தைகள் பொழிந்து கொண்டே இருக்கும் இலக் கியகுற்றாலத்தில் நீங்கள் நனைந்து கொண்டே இருக்கலாம். கவிஞர் ஜீவிக்கு இது 11ஆவது கவிதை தொகுப்பு  வாழ்நாள் எல்லாம் கவிதை மனத்துடன்  வாழ்ந்திருக்கின்றார். கவிஞர் தங்கம்  மூர்த்தி 13 பக்கத்திற்கு ஒரு ஆய்வுரை யையே மிக அற்புதமாக ஆத்மார்த்த மாக எழுதியிருக்கின்றார் உண்மை யின் உரைகல்லாக அடர்த்தியான சொற்களோடு பதிவு செய்திருக்கின்றார்.  காலம் வெளியீட்டிற்காக நேர்த்தியா னதொரு புத்தக வடிவமைப்பு செய்த தோடு ஓவியக் கவிஞர் ஸ்ரீ ரசா பதிப்பு  உரை எழுதி இருக்கின்றார். கவிஞர்  ஜீவி ஒரு பக்கத்திற்காவது தன்னுரை யை எழுதி இருக்கலாம். இனி கவிதைகள் குறித்து ஓய்வு  பெற்ற தனது வாழ்வியல் பொழுதுகளை மரபும் புதுமையும் கலந்து வாசிக்கச் சுகம்தரும் ரம்யமான கவிதையாக்கி இருக்கின்றார். அம்மாவிற்கென எழுதும் கவிதை கள் எப்பொழுதும் அழகு பெறுகின்றன. இதோ கோடி நட்சத்திரங்கள் ஜொலித்தா லும் அம்மாவின் ஜோடி மூக்குத்திக்கு இணையாகாது.

இயங்குதலே வாழ்வின் முக்கியம் என்றுரைக்கவும் ஆற்றுமணலில் காலாற நடந்துகொண்டே நம்மை தூண்டிவிடுகிறார். நகர் நட ஒடு என்ன செய்தாலும் சுவடுகள் முக்கியம். காலத்தின் பதிவை மிகவும் அழுத்த மாக பதிவு செய்ய கற்றுக்கொடுக் கின்றார். ஒன்றையொன்று விழுங்கும் நவீன  விஞ்ஞானத்தையும் மிக அழகிய வரி களால் நமக்கு சொல்லிச் செல்கிறார். உள்ளீடாக நிலையாமையெனும் தத்துவமும் உள்பொருளாக பொதிந்து வைத்திருக்கின்றார் கவிஞர். நாடகத்திற்கு சினிமா, சினிமா விற்கு சின்னத்திரை, சின்னத்திரைக்கு யூடியூப் இடுப்பிலிருந்தே இறங்குகின்றன துடுக்கான குழந்தைகள். எறும்புகள் போகும்வழித்தடத்தை காலால் மிதித்து கடந்துபோகின்றோம். மிதித்த பாதங்களுக்கு நோவில்லை; மிதிபட்ட எறும்புகளுக்கு மரண ரணம்.  அதுபோல குடும்ப உறவுகளுக்குள் சொற்களால் நாம் நிகழ்த்தும் வன் முறை இருக்கின்றதே புறச்சுவடுகள் ஏதுமற்று அழுதுவடியும் அகச்சுவடு கள்; அவற்றை சுமந்தலையும் பெண் களுக்காக ஒரு காயங்களுடனான கவிதை. பவுடர் பூசிய மனைவியின் முகத்தில் காயமேதுமில்லை உற்றுப் பார்த்தால் உள்காயமிருக்கலாம்.

நம்மை சுற்றி குவிந்திருக்கும் நவீன அறிவியல் சாதனங்களை பற்றி யதொரு பட்டியலிட்டு,  கவிதையில் கடைசி வரிகளை இப்படி முடிக்கின்றார் கவிஞர் எடுக்கிற இடத்தில் எல்லாம் வைத்துவிட்டு மனசை மட்டும் வைத்தி ருக்கிறார்கள் தொடமுடியாத தூரத்தில். இதனால் சகலமானவர்களுக்கும் என்று ஒரு கவிதை பாடிமுடிக்கின்றார். அதன் இறுதி வரிகள் நூலின் பல  கவிதைகள் பேசவேண்டிய பாடு பொருளை ரத்தினச் சுருக்கமாக சொல்லிச்செல்கின்றது. கனத்த புத்தகங்களின் தத்து வங்களை புறந்தள்ளி பேசப்படக்கூடும் நல்ல கவிதையின் ஒருவரி.  கவிதையின் பல வரிகளும் வாசித்த பின்னும் நம்மோடு உரையாடிக் கொண்டிருக்கின்றன. தொகுப்பு முழு வதும் கவிதையின் இறுதி முடிச்சுகளை ஒரு ஆபரணம் போல் எளிய வார்த்தை களில் அழகிய சொற்களால் நெய்து கொடுத்திருக்கின்றார். எந்நேரமும் புன்னகையுடன் சுற்றுப்புறத்தை அன்பின் வழி பர வசப்படுத்தும் அழகிய நூலில் கவி யரங்க கவிதைகளை சற்று வடிகட்டி இருக்கலாம் என்று கருதுகிறேன். ஆங்காங்கே தென்படும் எழுத்துப் பிழைகளை தாண்டி அழகாய் சுடர்விடு கிறது கவிஞர் ஜீவியின் ஊற்றுமணல் கவிதைகள். ஆற்றுமணலில் அள வளாவி கவிதை வெளிகளில் நீங்களும் வாசித்து காலாற நடைபயிலலாம்.