ஜெய்ப்பூர், ஜூலை 18 - நீதிபதிகள் தங்களின் ஓய்வு காலத்தைப் பற்றி சிந்திப்பது, இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து என்று காங்கிரஸ் மூத்த தலைவ ரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப் பூரில் 18-ஆவது அகில இந்திய சட்ட சேவைகள் ஆணையத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. உச்ச நீதிமன்றத் தின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, ஒன்றிய அரசின் சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் உச்சநீதி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் கலந்து கொண்டு உரையாற்றி னார். அப்போது அவர் மேலும் கூறியதாவது: “நாம் நமது வாழ்க்கையை எப்படி நடத்த விரும்புகிறோம் என்பது பற்றி சிந்திக்க வேண்டும். நான் முதலமைச்சராகி விட்டேன். சிலர் எம்எல்ஏ-க்களாகவும், சிலர் எம்.பி.-க்களாகவும் மாறிவிட்டனர். அதேபோல நீதிபதியாகும்போது ஒருவர் மிகவும் நிச்சயமாக பெருமைப்படுவார். ஒட்டுமொத்த மாக வாழ்க்கையில் நாம் சிறப்பா கச் செயல்பட வேண்டும்; நாட்டுக் காக ஏதாவது செய்ய வேண்டும். இப்படித்தான் சிந்திக்க வேண்டும். மாறாக, ஓய்வுக்குப் பிறகு என்ன செய்வோம் என்பதையே தொடர் ந்து யோசித்துக் கொண்டிருந்தோ மேயானால், விஷயங்கள் எப்படி நடக்கும்?
‘ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது’ என்று உச்ச நீதிமன்றத் தின் நான்கு நீதிபதிகள் கூறினர். நாங்கள் (காங்கிரஸ் கட்சி) அதைப் பற்றி அப்போது நிறைய யோசித்தோம். அவ்வாறு கூறிய நீதிபதிகளில் ஒருவரான கோ கோய் தலைமை நீதிபதியானார். ஆனால் அவரே தலைமை நீதிபதி யான பின்னரும், முன்பிருந்த அதே அமைப்பு தொடர்ந்தது. பின்னர், கோகோய் நாடாளுமன்ற உறுப்பி னரானார். இவை நாம் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள். கடந்த ஜூலை 1 அன்று, முகமது நபி குறித்த, பாஜக-வின் முன் னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவின் கருத்துக்காக பார்திவாலா மற்றும் சூர்ய காந்த் ஆகிய உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள், சில கருத்துக் களை முன்வைத்தனர். ஆனால், அந்த நீதிபதிகளுக்கு எதிராக உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதி மன்ற முன்னாள் நீதிபதிகள், அதி காரத்துவம் மற்றும் அலுவலர்கள் உட்பட 116 பேர் நிற்க வைக்கப் பட்டனர். அவர்கள் யார்? அவர்க ளின் எதிர்வினை எப்படி நிகழ்ந்தது? அவர்களை யார் நிர்வகித்தார்கள்? என்ற கேள்வி எழுகிறது.
கோவா, மணிப்பூர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ் டிரா மாநில அரசுகள் கவிழ்கின் றன. நாட்டில் ஜனநாயகம் இருக் கிறதா? என்றே தெரியவில்லை. எனது அரசாங்கம் எப்படி காப்பாற் றப்பட்டது என்று எனக்கு தெரியவில்லை. நான் இன்று உங்கள் முன் நின்றிருக்க மாட் டேன். இன்று வேறு முதல்வரை நீங்கள் சந்தித்து இருப்பீர்கள். நாட்டில் பதற்றம் மற்றும் வன்முறை சூழல் நிலவி வருகிறது. ஜனநாயகம் சகிப்புத்தன்மையில் பின்தங்கியுள்ளது. மக்கள் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை கேட்கிறார்கள், அதனால்தான் மக்கள் அவருக்கு வாக்களிக்கி றார்கள். அந்த பிரதமர், தேசத் துக்கு உரையாற்றி ‘ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் பேணப் பட வேண்டும்’ என்று கூற வேண்டாமா? எந்த விலை கொடுத் தாலும் வன்முறையை ஏற்க மாட்டேன் என்று அவர் கூற வேண்டும். சட்டத்துறை அமைச்சர் இதுபற்றி பிரதமர் மோடி அவர்களிடம் கூறுவார் என நான் நம்புகிறேன். ஏனென்றால் பிரதமர் மோடி எங்கள் (எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாநில முதல்வர்களின்) பேச்சை கேட்பதில்லை. இவ்வாறு அசோக் கெலாட் பேசியுள்ளார்.